பக்கம் எண் :

458அயோத்தியா காண்டம்

 பழுவம், வெங் கனல் கதுவியது
     ஒப்பன - பாராய்!

     நுண் தொளை குழுவும் வேயினும் - நுண்ணிய தொளை நிரம்பப்
பெற்ற புல்லாங்குழல்ஓசையினும்;  குறி நரம்பு எறிவு உற்று எழுவு
தண்தமிழ் யாழினும் -
ஓசையைக் குறித்து(எழுப்பவல்ல) நரம்புகளை (கை
விரல்களால்) தடவி எழுப்பப்படுகின்ற குளிர்ந்த இனிய யாழ்ஓசையினும்;
இனிய - இனிமையான; சொல் கிளியே - சொற்களைப் பேசுகின்ற
கிளிபோல்பவளே!; முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு - முற்றிலும்
பூக்கள் பூத்துள்ளஅடிமரத்தை உடைய முருக்க மரம்; இடை மிடைந்த
பழுவம்
- இடையே நெருங்கி உள்ள காடு; வெங் கனல் கதுவியது
ஒப்பன
- கொடிய நெருப்பினால் பற்றப்படுள்ளது போன்றவற்றை;பாராய்-.

     முருக்கமலர் செந்நிறம் உடையது ஆதலின், முழுதும் மலர் பூத்த
முருக்க மரம் நிரம்பியுள்ளகாடு தீப்பிடித்தது போலத் தோன்றுவது
இயற்கையாகும்.                                               28

2074. ‘வளைகள் காந்தளில் பெய்தன
     அனைய கைம் மயிலே!
தொளை கொள் தாழ் தடக்
     கைந் நெடுந் துருத்தியில் தூக்கி,
அளவு இல் மூப்பினர் அருந்தவர்க்கு,
     அருவி நீர் கொணர்ந்து,
களப மால் கரி குண்டிகைச்
     சொரிவன - காணாய்

     வளைகள் காந்தளில் பெய்தன அனைய கை மயிலே! -
வளையல்களைக் காந்தள் மலரில்இட்டு வைத்தாற் போன்ற கைகளை
உடைய மயில் போல்பவளே!;  மால் கரிக் களபம் -
பெரிய யானைக்
குட்டிகள்; அளவு இல் மூப்பினர் அருந்தவர்க்கு - அளவுபடாத முதுமை
உடையவர்களாய அரிய தவ முனிவர்களுக்கு;  அருவி நீர் - அருவியில்
உள்ள நீரை; தொளை கொள் தாழ் தடக்கை நெடுந்துருத்தியில் -
துவாரத்தைக் கொண்ட தொங்குகிற பெரியதமது கையாகிய நீண்ட
தோல்பையிலே;  தூக்கிக் கொணர்ந்து - முகந்து கொண்டு வந்து;
குண்டிகை - (அம்முனிவர்களது ) கமண்டலத்தில்;  சொரிவன -
ஊற்றுவனவற்றை;  காணாய் -.

     காந்தள்- கைபோலும் அஃறினைப் பொருளாகிய யானைக் குட்டிகளும்
முனிவர்களது முதுமை கருதிஅவர்களுக்கு அருவி நீர் கொணர்ந்து
கமண்டலத்தில்  ஊற்றுகின்றன என்று சித்திரகூட  மலையின்பண்பு நலம்
கூறியதாம்.  களபம் - யானைக்கன்று.  முப்பது  வயதுடைய யானையைக்
குறிக்கும் என்பர். துருத்தி - தோல்பை. (தண்ணீர் முகக்க உதவும்.)      29