வளைத்து; காந்து குண்டத்தில் - வெம்மையுள்ள ஓமகுண்டத்தில்; அடங்கு எரி -அடங்கிய நெருப்பை; எழுப்புவ - எரியச் செய்கின்றன; காணாய் - இச்சித்திரகூட மலையில் உள்ள மயில்கள் அந்தணர் ஓமகுண்டத்தில் நெருப்பைத் தம் சிறகால் விசிறி எரியச் செய்து உதவுகின்றன. 31 | 2077. | ‘அலம்பு வார் குழர் ஆய் மயில் பெண் அருங்கலமே! நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவுற நாடி, சிலம்பி, பஞ்சினில், சிக்கு அறத் தெரிந்த நூல், தே மாம் - பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன - பாராய்! |
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அருங்கலமே! - அசைகின்ற நீண்ட கூந்தலைஉடைய அழகிய மயில் போன்ற பெண்களுக்கு அணிகலமாய் விளங்குகின்றவளே!; நலம் பெய்வேதியர் - நன்மையைச் செய்கின்ற அந்தணர்கள்; மார்பினுக்கு - மார்பில்அணிவதற்கு; இயைவு உற - பொருந்த; நாடி - ஆராய்ந்து; தேமாம் பலம்பெய்மந்திகள் - தேமா மரத்திலிருந்து பழங்களைக் கீழே சிதறுகின்ற இயல்பை உடைய குரங்குகள்; சிலம்பி பஞ்சினில் - பட்டுப் பூச்சி, பஞ்சு இவற்றால் ஆகிய; சிக்கு அறத் தெரிந்த நூல் - சிக்கில்லாதபடி ஆராய்ந்து கொண்டுவந்த நூலை; உடன் வந்து- விரைந்து வந்து; கொடுப்பன - கொடுக்கின்றவற்றை; பாராய் -. அந்தணர் முப்புரிநூல் அணிதற்கு மந்திகள் பட்டுப்பூச்சி பஞ்சு ஆகியவற்றில் இருந்துசிக்கில்லாத நூலைத் தேர்ந்து கொடுத்து உதவி செய்கின்றன என்பதும் மேலது போன்றதே. 32 | 2078. | ‘தெரிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே! பெரிய மாக் கனி, பலாக் கனி, பிறங்கிய வாழை அரிய மாக் களி, கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்பன, கரிய மா கிழங்குஅகழ்ந்தன கொணர்வன - காணாய்! |
|