பக்கம் எண் :

460அயோத்தியா காண்டம்

வளைத்து;  காந்து  குண்டத்தில் - வெம்மையுள்ள ஓமகுண்டத்தில்;
அடங்கு எரி -அடங்கிய நெருப்பை;  எழுப்புவ - எரியச் செய்கின்றன;
காணாய் -

     இச்சித்திரகூட மலையில் உள்ள மயில்கள் அந்தணர் ஓமகுண்டத்தில்
நெருப்பைத் தம் சிறகால் விசிறி எரியச் செய்து உதவுகின்றன.          31

2077.‘அலம்பு வார் குழர் ஆய் மயில்
     பெண் அருங்கலமே!
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு
     இயைவுற நாடி,
சிலம்பி, பஞ்சினில், சிக்கு அறத்
     தெரிந்த நூல், தே மாம் -
பலம் பெய் மந்திகள் உடன் வந்து
     கொடுப்பன - பாராய்!

     அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அருங்கலமே! -
அசைகின்ற நீண்ட கூந்தலைஉடைய அழகிய மயில் போன்ற பெண்களுக்கு
அணிகலமாய் விளங்குகின்றவளே!;  நலம் பெய்வேதியர் - நன்மையைச்
செய்கின்ற அந்தணர்கள்;  மார்பினுக்கு - மார்பில்அணிவதற்கு;  இயைவு
உற -
பொருந்த;  நாடி - ஆராய்ந்து;  தேமாம் பலம்பெய்மந்திகள் -
தேமா மரத்திலிருந்து பழங்களைக் கீழே சிதறுகின்ற இயல்பை உடைய
குரங்குகள்;  சிலம்பி பஞ்சினில் - பட்டுப் பூச்சி, பஞ்சு இவற்றால் ஆகிய;
சிக்கு அறத் தெரிந்த நூல் - சிக்கில்லாதபடி ஆராய்ந்து கொண்டுவந்த
நூலை; உடன் வந்து- விரைந்து வந்து; கொடுப்பன - கொடுக்கின்றவற்றை;
பாராய் -.

     அந்தணர் முப்புரிநூல் அணிதற்கு மந்திகள் பட்டுப்பூச்சி பஞ்சு
ஆகியவற்றில் இருந்துசிக்கில்லாத நூலைத் தேர்ந்து கொடுத்து உதவி
செய்கின்றன என்பதும் மேலது போன்றதே.                        32

2078.‘தெரிவைமார்க்கு ஒரு கட்டளை
     எனச் செய்த திருவே!
பெரிய மாக் கனி, பலாக் கனி,
     பிறங்கிய வாழை
அரிய மாக் களி, கடுவன்கள்
     அன்பு கொண்டு அளிப்பன,
கரிய மா கிழங்குஅகழ்ந்தன
     கொணர்வன - காணாய்!