| கடிய மாசுணம், கற்று அறிந்தவர் என அடங்கிச் சடை கொள் சென்னியர், தாழ்வு இலர் தாம் மிதித்து ஏறப் படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பன - பாராய்! |
இடி கொள் வேழத்தை - இடி போலப் பிளிறுதல் கொண்ட யானையை; எறிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் கடிய மாசுணம் - தந்தத்தோடு ஒருசேரத் தூக்கிவிழுங்கி விடக்கூடிய கொடிய மலைப் பாம்பு; கற்று அறிந்தவர் - நூற்பொருளைக் கற்றுத்தெளிந்தவர்; என - போல; அடங்கி - அடக்கம் உடையதாய் (தம் ஆற்றலைஒடுக்கிக் கொண்டு); சடை கொள் சென்னியர் - சடா முடியை உடைய முனிவர்கள்; தாழ்வு இலர் - சரிதல் இல்லாதவராய்; தாம் மிதித்து ஏற - தாமே மலையின் மேல் மிதித்து ஏறிச் செல்லும்படி; படிகளாம் என - படிக்கற்களைப் போல; தாழ்வரை- மலை அடிவாரங்களில்; கிடப்பன - கிடக்கின்றவற்றைப்; பாராய் -. ஆற்றல் சான்ற மலைப்பாம்புகள் அடங்கி இருத்தலுக்குக் கற்றுணர்ந்தவர் அடக்கம்உவமையாகும். ‘தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சி’ என்ற சிந்தாமணியை இங்குக்(நாமகள் - 53) கருதுக. மலைப் பாம்புகளும் படிகளாகக் கிடந்து முனிவர்கள் தாழாது மலையேற உதவுகின்றன என்றவாறாம். 35 2018. | ‘அசும்பு பாய் வரை அருந் தவம் முடித்தவர், துணைக் கண் தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு, விண் தருவான் விசும்பு தூர்ப்பன ஆம் என, வெயில் உக விளங்கும் பசும் பொன் மானங்கள் போவன வருவன - பாராய்!’ |
அசும்பு பாய் வரை - ஊற்றெடுத்து நீர்பாயும் மலையிலே; அரும் தவம்முடித்தவர் - செய்தற்கு அரிய தவத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகிய; துணைக்கண்தசும்பு வேயந்தவர் ஒத்தவர் தமக்கு - தம் இரண்டு கண்களிலும் நீர்க்குடம் கவிழ்த்தாற்போல அன்பினால் நீர் பெருக விடுகின்றவர்களை ஒத்தவர்களாய நல்லோர்களுக்கு; விண்தருவான் - வீடு பேறாகிய விண்ணுலக வாழ்வினைத் தர வேண்டி; விசும்பு தூர்ப்பன ஆம் என - ஆகாயத்தை மூடிக் கொள்வனவாகும் என்று சொல்லும்படி; வெயில் உக விளங்கும்-ஒளி சிந்தும்படி விளங்குகின்ற; பசும்பொன் மானங்கள்- பசிய பொன்னால் ஆகிய |