பக்கம் எண் :

462அயோத்தியா காண்டம்

 கடிய மாசுணம், கற்று
     அறிந்தவர் என அடங்கிச்
சடை கொள் சென்னியர், தாழ்வு
     இலர் தாம் மிதித்து ஏறப்
படிகளாம் எனத் தாழ்வரை
     கிடப்பன - பாராய்!

     இடி கொள் வேழத்தை - இடி போலப் பிளிறுதல் கொண்ட
யானையை; எறிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் கடிய மாசுணம் -
தந்தத்தோடு ஒருசேரத் தூக்கிவிழுங்கி விடக்கூடிய கொடிய மலைப் பாம்பு;
கற்று அறிந்தவர் - நூற்பொருளைக் கற்றுத்தெளிந்தவர்;  என - போல;
அடங்கி - அடக்கம் உடையதாய் (தம் ஆற்றலைஒடுக்கிக் கொண்டு);
சடை கொள் சென்னியர் - சடா முடியை  உடைய முனிவர்கள்; தாழ்வு
இலர் -
சரிதல் இல்லாதவராய்;  தாம் மிதித்து  ஏற - தாமே மலையின்
மேல் மிதித்து ஏறிச் செல்லும்படி;  படிகளாம் என - படிக்கற்களைப் போல;
தாழ்வரை- மலை அடிவாரங்களில்;  கிடப்பன - கிடக்கின்றவற்றைப்;
பாராய் -.

     ஆற்றல் சான்ற மலைப்பாம்புகள் அடங்கி இருத்தலுக்குக்
கற்றுணர்ந்தவர் அடக்கம்உவமையாகும். ‘தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின்
இறைஞ்சி’ என்ற சிந்தாமணியை  இங்குக்(நாமகள் - 53) கருதுக.  மலைப்
பாம்புகளும் படிகளாகக் கிடந்து  முனிவர்கள் தாழாது  மலையேற
உதவுகின்றன என்றவாறாம்.                                      35

2018. ‘அசும்பு பாய் வரை அருந் தவம்
     முடித்தவர், துணைக் கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர்
     தமக்கு, விண் தருவான்
விசும்பு தூர்ப்பன ஆம் என,
     வெயில் உக விளங்கும்
பசும் பொன் மானங்கள் போவன
     வருவன - பாராய்!’

     அசும்பு பாய் வரை - ஊற்றெடுத்து  நீர்பாயும்  மலையிலே; அரும்
தவம்முடித்தவர் -
செய்தற்கு  அரிய தவத்தைச் செய்து  முடித்தவர்கள்
ஆகிய; துணைக்கண்தசும்பு வேயந்தவர் ஒத்தவர் தமக்கு - தம்
இரண்டு கண்களிலும் நீர்க்குடம் கவிழ்த்தாற்போல அன்பினால் நீர் பெருக
விடுகின்றவர்களை ஒத்தவர்களாய நல்லோர்களுக்கு; விண்தருவான் - வீடு
பேறாகிய விண்ணுலக வாழ்வினைத் தர வேண்டி; விசும்பு தூர்ப்பன ஆம்
என -
ஆகாயத்தை மூடிக் கொள்வனவாகும் என்று சொல்லும்படி; வெயில்
உக விளங்கும்-
ஒளி சிந்தும்படி விளங்குகின்ற; பசும்பொன் மானங்கள்-
பசிய பொன்னால் ஆகிய