பக்கம் எண் :

சித்திரகூடப் படலம் 463

விமானங்கள்; போவன வருவன - போகின்றவற்றையும், மீள
வருகின்றவற்றையும்; பாராய் -.

     சித்திரகூட மலை தேவர்கள் சஞ்சரிக்கும் இடம், ஆதலின், அவர்கள்
விமானத்தில் ஏறிப்போவதும் வருவதுமாயிருத்தலின் வானமெங்கும்
விமானத்தால் போர்த்தப்பட்டது போல் உள்ளது.அதுவே அருந்தவம்
முடித்தவர்களுக்கு  வீடுபேறு தருதற்கு விண்ணுலகு கொண்டு செல்ல வந்த
விமானங்கள்போலவும் தோற்றம் அளித்தன. தசும்பு - குடம்; புறம்
பொசிகின்ற மண்குடத்தைக்குறிக்கும்.                             36

இராமன் அந்தணரின் விருந்தினன் ஆதல்  

2082.இனைய யாவையும் ஏந்திழைக்கு
     இயம்பினன் காட்டி,
அனைய மால் வரை அருந் தவர்
     எதிர்வர, வணங்கி,
வினையின் நீங்கிய வேதியர்
     விருந்தினன் ஆனான் -
மனையில் மெய் எனும் மா தவம்
     புரிந்தவன் மைந்தன்.

     மனையில் - அரண்மனையில்;  மெய் எனும் மாதவம் புரிந்தவன்
மைந்தன் -
சத்தியம் என்னும் பெரிய தவத்தைச் செய்தவனாகிய
தயரதனுடைய மகனாகிய இராமன்;  இனையயாவையும் - இப்படிப்பட்ட
சித்திரகூட மலையின் பண்பு நலங்களை யெல்லாம்;  ஏந்து இழைக்கு -
உயர்ந்த அணிகலக்களை உடையாளாய சீதைக்கு;  இயம்பினன் காட்டி -
சொல்லிக் காண்பித்து; அனைய மால் வரை - அந்தப் பெரிய சித்திரகூட
மலையின்; அருந்தவர் - அரிய முனிவர்கள்; எதிர்வர - (தன்னை)
எதிர்வந்து  வரவேற்க; வணங்கி - (அவர்களை) வழிபட்டு;  வினையின்
நீங்கிய -
தவத்தால்  இரு வினையில்இருந்து  நீங்கியவர்களாகிய;
வேதியர் - அந்த வேதியர்களுக்கு;  விருந்தினன்ஆனான் -.

     வனம் சென்று தவம் செய்வாரினும் தயரதன் மேம்பட்டவன் என்பது
காட்ட ‘மனையின் மெய்எனும் மாதவம் புரிந்தவன்’ என்றார்.          37

சூரியன் மறைய, அந்தி நேரம் வருதல்  

கலிவிருத்தம்

2083.மா இயல் உதயம் ஆம் துளப வானவள்,
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக,
கா இயல் குட வரை, கால நேமிமேல்,
ஏவிய திகிரிபோல், இரவி ஏகினான்.