புலரி போனபின் - சூரியன் மறைந்த பிறகு; மகளிருக்கு ஆனனம் அளித்ததாமரைப் பூ - இதுகாறும் பெண்களுக்கு முகத்தைச் செய்தனவாகிய மலர்ந்த தாமரைப் பூக்கள்;(இப்போது) நனி முகிழ்த்தன - மிகவும் குவிந்தன; வான் எனும் மணித்தடம் -வானம் போல உள்ள அழகிய நீர்நிலையில்; மீன் என விளங்கிய - நட்சத்திரம் போல விளங்கிய; வெள்ளி ஆம்பல் வீ - வெண்ணிறம் உள்ள ஆம்பல் மலர்கள்; எங்கும் மலர்ந்த - எவ்விடத்தும் மலர்ந்தன. மலர்ந்த தாமரை பெண்கள் முகம் போலும் ஆதலின், மலர்ந்த தாமரை என்று சொல்வார்‘மகளிருக்கு ஆனனம் அளித்த தாமரை’ என்றார். இரவில் தாமரை குவிதலும் ஆம்பல் மலர்தலும்இயல்பு. 40 2086. | மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின; தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின; நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின; அந்தியை நோக்கினான், அறிவை நோக்கினான். |
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின - (இரவு நேரம் வருதலின் ஏறி உறங்க)பெண் குரங்கும் ஆண் குரங்கும் மரங்களைப் பார்த்தன; தந்தியும் பிடிகளும் தடங்கள்நோக்கின - ஆண் யானையும் பெண் யானையும் தம் இருப்பிடத்துக்குச் சென்று சேரும்வழிகளைப் பார்த்தன; நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின- பழிப்பு இல்லாதபறவைகள் தம் கூடுகள் உள்ள நீண்ட வழியைப் பார்த்தன; அறிவை நோக்கினான் - மெய்ப்பொருளை நோக்கி அறிதற்கு உரிய இராமன்; அந்தியை நோக்கினான் - மாலைக்காலத்தில் செய்தற்கு உரிய கடமைகளைச் செய்யத் தொடங்கினன். குரங்குகள் இரவில் மரத்தின்கண் உறங்கல் இயல்பு; பறவைகள் தம் கூட்டை அடைதலும், யானைமுதலியன தம் இருப்பிடத்தை நாடிச் சேறலும் மாலை நேரத்தில் நிகழ்வன. தடம் -வழி. 41 இராமன் முதலிய மூவரும் மாலை வழிபாடு செய்தல் 2087. | மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில; மை அரு நறு மலர் மலர்ந்தவாம் சில; ஐயனோடு, இளவற்கும் அமுதனாளுக்கும் கைகளும், கண்களும், கமலம் போன்றவே. |
மொய் உறு நறு மலர் சில முகிழ்த்தவாம்- (மாலையில்) நெருங்கிப் பொருந்தியமணமுள்ள மலர்கள் சில குவிந்தன; மை அறு நறு மலர் சில மலர்ந்தவாம்- குற்றமற்றமணமுள்ள மலர்கள் சில மலர்ந்தன; ஐயனோடு- இராமனோடு; இளவற்கும் - இலக்குவனுக்கும்; |