பக்கம் எண் :

சித்திரகூடப் படலம் 467

     நீளக்கழி, குறுக்குக் கழிகள், தூலம் முதலியன கூரை வேய்வதற்கு
முன் கட்டப் பெறுவன. விரிச்சு - விரித்து. ஏகாரம் ஈற்றசை.           44

2090.தேக்கு அடைப் படலையின் செறிவு செய்து, பின்,
பூக் கிளர் நாணலின் புல்லு வேய்ந்து, கீழ்த்
தூக்கிய வேய்களின் கவரும் சுற்றுறப்
போக்கி, மண் எறிந்து, அவை புனலின் தீற்றியே.

     தேக்கு அடைப் படலையின் செயிவு செய்து - தேக்க இலை
கொண்டு மேல் கூரையைச்செறிய மூடி;  பின் - பிறகு;  பூக் கிளர்
நாணலின் புல் வேய்ந்து-
பூத்துவிளங்கும் நாணற் புல்லை மேலே பரப்பி;
கீழ்த் தூக்கிய வேய்களின் -  கீழேநிறுத்தப் பெற்ற மூங்கில் கழிகளால்;
சுற்றுறச் சுவரும் போக்கி - சுற்றுப்பக்கமெல்லாம் சுவரைச் செய்து; மண்
எறிந்து -
அதன்மேல் மண்ணை அடித்து; அவை -அச்சுவரை; புனலின்
தீற்றி -
தண்ணீரால் மெழுகிப் பூசி.

     முதலில் இலைகளை வேய்ந்து  அதன் மேல் நாணற் புல்லைப்
பரப்பினான் என்க. இலைகள்நாணற்புல் விழாமல் தாங்குவன. மூங்கிற்
பிளாச்சுகளின் மேல் மண்பூசித் தண்ணீரால் மெழுகிச்சுற்றுச் சுவர்
அமைத்தானாம்.  ஏகாரம் ஈற்றசை.                               45

2091.வேறு இடம், இயற்றினன் மிதிலை நாடிக்கும்,
கூறின நெறி முறை குயிற்றி, குங்குமச்
சேறு கொண்டு அழகுறத் திருத்தி, திண் சுவர்
ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே.

     மிதிலை நாடிக்கும் - சீதைக்கும்; வேறும் இடம் இயற்றினன் -
தனி இடத்தைச் செய்து அமைத்தான் (எவ்வாறு எனில்); கூறின நெறி
முறை குயிற்றி
- மேலே சொன்ன முறைப்படி செய்து அதன்மேல்;
குங்குமச் சேறு கொண்டு அழகுறத் திருத்தி
- குங்குமக் குழம்பைக்
கொண்டு அழகாகச் சுவர்களை ஒழுங்கு செய்து; திண்சுவர் - வலிய
சுவரிலே; ஆறு இடு மணியொடு தரளம அப்பி - ஆற்றிலிருந்து
கிடைத்த மணிக்கற்களோடு முத்துகளையும் பொருத்தி.

     பிராட்டியின் தனி இடத்தைக் குங்குமக் குழம்பால் பூசி, மணியும்
முத்தும் சுவர்களிலே அப்பி அழகு செய்தமை கூறினார், ஏகாரம் ஈற்றசை.
                                                       46

2092.மயிலுடைப் பீலியின் விதானம் மேல் வகுத்து,
அயிலுடைச் சுரிகையால் அருகு தூக்கு அறுத்து,
எயில் இளங் கழைகளால் இயற்றி, ஆறு இடு
செயலுடைப் புது மலர் பொற்பச் சிந்தியே.