திருப்பாற்கடல்; வைகுந்தம் - (நித்ய சூரிகள் என்றும் வாழ்வுக்கும் இருப்பாகிய)வைகுந்தம்; என்று சொல்லல் ஆம் ஆய - என்று சொல்லுதற்குப் பொருந்தியதாகிய; சாலை - சாலைக்கண்; அரும் பெறல் அன்பினன் - பெறலரும் அன்புடையனாகியஇராமபிரான்; நேய நெஞ்சின் - தனது அன்புள்ளத்தால்; விரும்பி -மகிழ்ச்சி அடைந்து; நிரம்பினான் - நிறைவடைந்தான். இராமன் குடிபுகுந்த காரணத்தால் திருமாலாகிய பரம் பொருள் வீற்றிருக்கும் இடங்களாக அச்சாலை ஆகியது. 49 சாலை அமைத்த இலக்குவனை நினைந்து இராமன் நெகிழ்ந்து கூறுதல் 2095. | மேவு கானம், மதிலையர்கோன் மகள் பூவின் மெல்லிய பாதமும் போந்தன; தா இல் எம்பி கை சாலை சமைத்தன- யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே? |
மிதிலையர் கோன் மகள் - மிதிலா நகரத்து அரசனாகிய சனகன் மகளாகியசீதையின்; பூவின் மெல்லிய பாதமும் - பூவைக் காட்டிலும் மிக மெல்லியவாகியபாதங்களும்; மேவு கானம் போந்தன - கொடிய காட்டில் நடந்து வந்தன; தா இல்எம்பி கை - குற்றம் அற்ற என் தம்பியின் கைகள்; சாலை சமைத்தன - குடிலைஅமைத்துத் தந்தன; யாதும் இல்லார்க்கு - எந்தத் துணையும் இல்லாதவர்களுக்கு; இயையாத - வந்து சேராதன; யாவை - எவை (ஒன்றும் இல்லை.) ‘பாதமும்’ என்ற உம்மை சிறப்பும்மை; மென்மைத் தன்மையை நோக்கியது. பொதுப்பொருள்குறித்த இறுதி அடியமடால் இது வேற்றுப்பொருள் வைப்பணியாம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 50 2096. | என்று சிந்தித்து, இளையவற் பார்த்து, ‘இரு குன்று போலக் குவவிய தோளினாய்! என்று கற்றனை நீ இதுபோல்?’ என்றான் - துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான். |
என்று சிந்தித்து- என்று இவ்வாறு நினைத்து; இளையவற் பார்த்து- இலக்குவனைப் பார்த்து; ‘இரு குன்று போலக் குவவிய தோளினாய்! - இரு மலைகளைப்போலப் பொருந்திய தோள்களை உடையவனே!; நீ இது போல் என்று கற்றனை? - நீஇவ்வாறு குடில் அமைப்பதற்கு எப்பொழுது கற்றுக் கொண்டாய்?;’ என்றான் - என்றுகேட்டவனாய்; துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான் - நெருங்கிய தாமரை போலும்கண்கள் நீர் சிந்தப் பெறுகின்றவனாக ஆனான். |