பக்கம் எண் :

472அயோத்தியா காண்டம்

ஆகிய செல்வத்துக்கு; என்ன கேடு உண்டு?- என்ன அழிவு உண்டு; இவ்
எல்லை இல்இன்பத்தை மேல் வரும் ஊதியத்தோடு உன்னு’ -
இந்த
அளவுபடாத அழிவுபடாத இன்பவாழ்க்கையைமறுமையில் இத்தவத்தால்
பெறும் நற்கதியாகிய இலாபத்தோடு சேர்த்து நினைப்பாயாக;’  என்றான்-.

     அரசச் செல்வம் அழிவுடையது; அளவு உடையது. ஆனால், தவச்
செல்வமோ அழிவற்றது;அளவற்றது; மறுமைக்கும் பயன் தரவல்லது.
ஆகவே அரச போகத்தைவிட, வனவாசமே எனக்கு மகிழ்ச்சி தருவது
ஆதலின், எனக்குத் துன்பம் விளைந்ததாகவே நான் கருதவில்லை; அதனை
நினைத்து நீதுன்புறுவானேன்’ என்றானாம் - இது ‘இடரினுக்கு அங்குரம்
முந்தி வந்து முளைத்தது அன்றோ’ என்றுஇலக்குவன் கூறிய சொற்களுக்குப்
பதில் போல் அமைந்து ஆறுதல் தருவதாயிற்று.                     55

இராமன் நோன்பு செய்து இனிமையாக இருத்தல்  

2101.தேற்றித் தம்பியை, தேவரும் கைதொழ,
நோற்று இருந்தனன், நோன் சிலையோன்; இப்பால்,
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர்
கூற்றின் உற்றது கூறலுற்றாம் அரோ.

     நோன் சிலையோன் - வலிய வில்லை உடைய இராமபிரான்
(இவ்வாறு கூறி); தம்பியைத் தேற்றி-; தேவரும் கைதொழ - தேவர்ளும்
வணங்கும்படியாக; நோற்று இருந்தனன் - தவம் செய்து இருந்தான்;
இப்பால் - இனி; ஆற்றல் மாதவன்ஆணையின் போனவர் கூற்றின் -
வலிமைமிக்க முனிவராய வசிட்டருடைய கட்டளையை மேற்கொண்டுசென்ற
தூதுவர் செய்தியில்; உற்றது - நடந்த செய்தியை; கூறல் உற்றாம் -
சொல்லத் தொடங்கினோம்.

     வசிட்டன் அனுப்பப் பரதன்பால் கேகய நாட்டுக்குச் சென்ற தூதுவர்
செய்தி இனி வருவதாம் -‘அரோ’ அசை.                          56