ஆகிய செல்வத்துக்கு; என்ன கேடு உண்டு?- என்ன அழிவு உண்டு; இவ் எல்லை இல்இன்பத்தை மேல் வரும் ஊதியத்தோடு உன்னு’ - இந்த அளவுபடாத அழிவுபடாத இன்பவாழ்க்கையைமறுமையில் இத்தவத்தால் பெறும் நற்கதியாகிய இலாபத்தோடு சேர்த்து நினைப்பாயாக;’ என்றான்-. அரசச் செல்வம் அழிவுடையது; அளவு உடையது. ஆனால், தவச் செல்வமோ அழிவற்றது;அளவற்றது; மறுமைக்கும் பயன் தரவல்லது. ஆகவே அரச போகத்தைவிட, வனவாசமே எனக்கு மகிழ்ச்சி தருவது ஆதலின், எனக்குத் துன்பம் விளைந்ததாகவே நான் கருதவில்லை; அதனை நினைத்து நீதுன்புறுவானேன்’ என்றானாம் - இது ‘இடரினுக்கு அங்குரம் முந்தி வந்து முளைத்தது அன்றோ’ என்றுஇலக்குவன் கூறிய சொற்களுக்குப் பதில் போல் அமைந்து ஆறுதல் தருவதாயிற்று. 55 இராமன் நோன்பு செய்து இனிமையாக இருத்தல் 2101. | தேற்றித் தம்பியை, தேவரும் கைதொழ, நோற்று இருந்தனன், நோன் சிலையோன்; இப்பால், ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர் கூற்றின் உற்றது கூறலுற்றாம் அரோ. |
நோன் சிலையோன் - வலிய வில்லை உடைய இராமபிரான் (இவ்வாறு கூறி); தம்பியைத் தேற்றி-; தேவரும் கைதொழ - தேவர்ளும் வணங்கும்படியாக; நோற்று இருந்தனன் - தவம் செய்து இருந்தான்; இப்பால் - இனி; ஆற்றல் மாதவன்ஆணையின் போனவர் கூற்றின் - வலிமைமிக்க முனிவராய வசிட்டருடைய கட்டளையை மேற்கொண்டுசென்ற தூதுவர் செய்தியில்; உற்றது - நடந்த செய்தியை; கூறல் உற்றாம் - சொல்லத் தொடங்கினோம். வசிட்டன் அனுப்பப் பரதன்பால் கேகய நாட்டுக்குச் சென்ற தூதுவர் செய்தி இனி வருவதாம் -‘அரோ’ அசை. 56 |