நல்ல பகலிலும்; கடிது - (ஓய்வில்லாமல்) விரைந்து; ஏகினார் - சென்றார்கள்; பரதன் கோயில் உற்றார் - பரதன் தங்கியுள்ள (கேகய நாட்டு)அரண்மனையை அடைந்தார்கள்; ‘படிகாரிர்! - வாயில் காவலர்களே!; மன்னவற்கு -பரதனுக்கு; எம் வரவு சொல்லுதிர் - (அயோத்தியிலிருந்து வந்திருக்கின்ற) எம்வருகையைத் தெரிவியுங்கள்;’ என்றார் - என்று சொன்னார்கள். உள்ளதை உள்ளவாறே சொல்லுதல், ஏவியவர் கூறியதை, அனுப்பிய செய்தியை மாற்றாது உரைத்தல் என்பன தூதர் இயல்பு, ஆதலின், ‘பொய் இலார்’ என்றார். ‘படிகாரிர்’ என்பது‘பரதீஹாரர்’ என்னும் வடசொல் திரிந்து ஆகிய சொல். ‘காரர்’ என்பது ‘காரிர்’ எனவிளியேற்றது. ‘ஏ’ பிரிநிலை; பரதனுக்கே தெரிவிக்க வேண்டும் ஏனையோர்க்கன்று எனலின்,. 1 தூதுவரிடம் பரதன் நலம் விசாரித்தல் 2103. | ‘தூதர் வந்தனர், உந்தை சொல்லோடு’ என, காதல் முந்திக் களிக்கின்ற சிந்தையான், ‘போதுக ஈங்கு’ என, புக்கு, அவர் கைதொழ, ‘தீது இலன்கொல் திரு முடியோன்’ என்றான். | ‘உந்தை சொல்லோடு தூதர் வந்தனர்’ என்- உன் தந்தையாகிய தயரதன் சொல்லி அ.னுப்பியசெய்தியோடு தூதுவர் வந்துள்ளார் என்று (வாயில்காவலர்) கூற; களிக்கின்ற சிந்தையான்- மகிழ்ச்சி அடைகி்ன்ற மனம் உடைய பரதன்; காதல் முந்தி- தந்தையின் சொற்களை அறியும் ஆசை முற்பட்டு; ஈங்குப் போதுக’ என- (அவர்கள்) உள்ளே வருக என்று கூற; அவர்- அத்தூதுவர்; புக்கு- உள்நுழைந்து; கைதொழ- கைகளைக் குவித்து வணங்கி நிற்க; ‘திரு முடியோன்- மாமுடி கவித்த மன்னர் மன்னனாகிய தயரதன்; தீது இலன் கொல்’- யாதொரு தீமையும் இல்லாமல் நலமாக இருக்கின்றானா?; என்றான்- என்று (தன் தந்தையாருடைய நலத்தை)விசாரித்தான்,. தந்தையின் உடல் நலனும் அவனால் ஆளப்பெறும் நாட்டின் நலனும் அடங்கத் ‘தீது இலன்கொல்’ என்று விசாரித்தான். பரதனைத் தூதுவர் காணும் போது அயோத்தியில் தயரதன்இறந்துபட்டுள்ளான் ஆதலின், அது அவனை அறியாமல் அவன் வாக்கில் ‘நலமாய் உளனோ’ என்றுவராமல் ‘தீது இலன் கெரல்’ என்று வந்ததாகக் கவிஞன் காட்டுவது குறிப்புமொழி எனப்பெறும். 2 தூதுவர் பதிலும் பரதன் விசாரிப்பும் 2104. | ‘வலியன்’ என்று அவர் கூற மகிழ்ந்தனன்; ‘இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும் உலைவு இல் செல்வத்தனோ?’ என, ‘உண்டு’ என, தலையின் ஏந்தினன், தாழ் தடக் கைகளே. |
|