சங்குகள் ஒலித்தன; பேரி மீன வேலையின் விம்மின - பெருமுரசுகள் மீனுடைய கடல் ஒலிபோல முழங்கின. சக்கரவர்த்தியின் குமாரர்கள் ஆதலின் எங்குச் செல்லினும் சேனையோடு செல்லுதல்அவர்க்கு இயல்பு ஆதலின் படை எழுச்சியும் கூறற்பாலதாம். சுற்றின, ஈண்டின, சூழ்ந்தனஎனவும், முரன்றன, விம்மின எனவும் சொற்களை மாற்றியமைத்த அழகு இன்பம் பயப்பது. 9 2111. | கொடி நெருங்கின; தொங்கல் குழீஇயின; வடி நெடுங் கண் மடந்தையர் ஊர் மடப் பிடி துவன்றின; பூண் ஒளி பேர்ந்தன, இடி துவன்றின மின் என, எங்குமே. |
(அச்சேனை எழுச்சி எங்கும்) கொடி நெருங்கின - கொடிகள் நெருங்கி வந்தன; தொங்கல்குழீஇயின- பீலிக்குஞ்சம் எனப்படும் தொங்கல் திரண்டு வந்தன;வடி நெடுங்கண் மடந்தையர்-மாவடுப் போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர்; ஊர் மடப்பிடி- ஏறிச் செலுத்துகின்ற இளையபெண் யானைகள்; துவன்றின- நெருங்கிச் சென்றன; பூண் ஒளி- (அம்மகளிர் அணிந்த)கலன்களின் ஒளி; இடி துவன்றின மின் என- இடியொடு நெருங்கிய மின்னலைப்போல; எங்கும்பேர்ந்தன- எல்லா இடங்களிலும் விட்டு விளங்கின. இம் மகளிர் அரச மகளிர்; போர்க்குச் செல்லாத சேனைகள் ஆதலின், வடி - மாவடு; கூர்மை எனப் பொருள்கூறலும் ஒன்று. அணிகள் ஒளியும், ஒலியும் விட்டு விட்டு நிகழ்தலின் ‘இடிதுவன்றின மின’ என உவமை கூறப் பெற்றது எனலாம். தொங்கல் - பிச்சம் எனப்பெறும், ‘ஏ’ஈற்றசை. 10 2112. | பண்டி எங்கும் பரந்தன; பல் இயம் கொண்டு இயம்பின கொண்டலின்; கோதையில் வண்டு இயம்பின; வாளியின் வாவுறும், செண்டு இயங்கு பரியும் செறிந்தவே. | பண்டி- வண்டிகள்; எங்கும் பரந்தன- எல்லாவிடங்களிலும் பரவிச் சென்றன; பல்இயம்- பலவகையான வாத்தியங்கள்; கொண்டலின் கொண்டு இயம்பின- மேக முழக்கத்தைப்போல ஒலிகொன்டு ஒலித்தன; கோதையில்- மைந்தரும் மகளிரும் சூடிய மாலையில்; வண்டு இயம்பின- வண்டுகள் ஒலித்தன; செண்டு இயங்கு- வையாளி வீதியில் உலாவுகின்; வாளியின் வாவுறும் பரியும்- அம்பைப்போல விரைந்து செல்கின்ற குதிரையும்; செறிந்த - நெருங்கிச் சென்றன. சேனைகள் செல்லுதலின் உணவு முதலிய உடன் கொண்டு செல்லும் வண்டிகள் எங்கும்பரந்தனவாம். செண்டு வட்ட வடிவமாக அமைத்த மைதானம். இதனைச் செண்டு வெளி என்பது அக்காலவழக்கு. 11 |