‘மகன்வயின் அன்பினால் மயங்கி - (தயரதன் அரசர்களை நோக்கி) என்மகன்மீது கொண்ட பாசத்தினால் அறிவு மயங்கி; யான் இது புகல - நான் இந்தக் கருத்தைத் தெரிவிக்க; நீர் புகன்ற இ பொம்மல் வாசகம் - (அதற்கு இணங்கி) நீங்கள் சொன்ன இந்தப்பொலிவு பெற்ற வார்த்தை; உகவையின் மொழிந்ததோ - மன மகிழ்ச்சியினால் புகன்றதோ?;தகவு என நினைந்தது - தகுதி என்று கருதியது; எத் தன்மையால் என்றான் - எவ்வகையினால்’ என்று வினவினான். உகவை - மகழ்ச்சி; உகவையான் நெஞ்சம் உள்ளுருகி என்பது நம்மாழ்வார் வாக்கு (திருவாய்மொழி6.2.9). 78 1392. | இவ்வகை உரைசெய இருந்த வேந்து அவை. ‘செவ்வியோய்! நின் திருமகற்குத் தேயத்தோர் அவ்வவர்க்கு, அவ்வவர் ஆற்ற ஆற்றும் எவ்வம்இல் அன்பினை, இனிது கேள்’ எனா, |
இவ் வகை உரை செய - (தயரதன் ) இவ்வாறு வினவ; இருந்த வேந்து அவை -அங்கே இருந்த அரசர் கூட்டம்; செவ்வியோய் - (தயரதனை நோக்கி) செப்பமுடையோய்!; நின் திருமகற்கு - உன் மகன்மீது; தேயத்தோர் அவ்வவர்க்கு - அங்கங்கே பற்பலநாட்டில் உள்ளோரும்; அவ்வவர் ஆற்ற ஆற்றுறும் - அவரவர்களும் மிகவும் செய்கின்ற; எவ்வம் இல் அன்பினை - குறைவில்லாத அன்பினை; இனிது கேள் எனா - இன்பமாகக்கேட்பாய்’ என்று சொல்லி. இது முதல் நான்கு பாக்களும் ஒரு தொடர். திருமகற்கு - உருபு மயக்கம்; ‘கு’ ஏழனுருபில் வந்தது. 79 1393. | ‘தானமும், தருமமும், தகவும், தன்மை சேர் ஞானமும், நல்லவர்ப் பேணும் நன்மையும் - மானவ! - வையம், நின் மகற்கு; வைகலும், ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே. |
‘மானவ - மனுவின் குலத்தில் தோன்றியவனே!; நின் மகற்கு - உன் மகனிடத்தில்;ஈனம் இல் செல்வம் -தாழ்வில்லாத அரசச் செல்வம்; வந்து இயைக என்ன - வந்துபொருந்தக் கடவது என்று சொல்வது போல; தானமும் - கொடைத் தன்மையும்; தருமம் -அறநெறியும்; தகவும் - ஒழுக்கமும்; தன்மை சேர் ஞானமும் - மேன்மை பொருந்திய மெய்யுணர்வும்; நல்லவர்ப் பேணும் நன்மையும் - பெரியோரைப் போற்றிக் காக்கும் நற்பண்பும்; நின்மகற்கு வைகலும் வைகும் - உன் மகனுக்கு என்றும் நிலையாகத் தங்கியுள்ளன.’ இதனால் இராமனுக்கு அரசனாதற்குரிய அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றனர் அரசர்கள் . தானம்- அறநெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு. |