2113. | துளைமுகத்தின் சுருதி விளம்பின; உளை முகத்தின உம்பரின் ஏகிட, விளை முகத்தன வேலையின் மீது செல் வளை முகத்தன வாசியும் வந்தவே. | சுருதி- வேத ஒலி; துளை முகத்தின்- உள் துளையுடைய குழலின் மூலமாக; விளம்பின- ஒலிக்கப்பெற்றன; உளை முகத்தின- தலையாட்டம் பொருந்தியனவும்; உம்பரின் ஏகிட-ஆகாயத்தில் செல்வதற்கு; விளைமுகத்தன- வல்ல செலவினையுடையவும்; வேலையின் மீது செல்- கடலின் மீது, செல்லும் ஆற்றல் உடையனவும் (ஆகிய); வளை முகத்தன- வளைந்த முகத்தினைஉடைய; வாசியும்- குதிரைகளும்; வந்த- இப்படைக்குழுவில் வந்தன. “குழுவு நுண் தொளை வேய்” என்றார் முன்னும். (2073.) குதிரைப் படை வருணனையில் குழலிசைபற்றிய குறிப்பு ஏன் - விளங்கவில்லை. 12 2114. | வில்லின் வேதியர், வாள் செறி வித்தகர், மல்லின் வல்லர், கரிகையின் வல்லவர், கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர், தொல்லை வாரணப் பாகரும், சுற்றினார். | வில்லின் வேதியர்- வில் வித்தைக்குரிய நூலில் தேர்ச்சியடைந்தவர்களும்; வாள்செறி வித்தகர்- வாட்போர் புரிவதில் திறமை உடையவரும்; மல்லின் வல்லார்- மல்சண்டையில் வலிமை படைத்தவரும்; கரிகையின் வல்லவர்- குற்றுடைவாளை வீசுதலில் வல்லவர்களும்; கொல்லும்- (பிறரை) அழிக்கின்ற; வேல் குந்தம் சுற்று உயர் கொற்றவர்-வேல் ஈட்டி ஆகிய படைகளை வீசக் கற்று உயர்ந்த வெற்றியாளர்களும்; தொல்லை- பழமையான(அனுபவம் மிக்க); வாரணப் பாகரும்- யானை ஓட்டுநரும்; சுற்றினார்- சூழ்ந்து வந்தார்கள். வேதம் வல்லவர் வேதியர். இங்கு வில் வேதம்; தனுர் வேதம் என்று வடிமொழியிற்குறிப்பிடுவர். கொல்லும் வேல் உபசார வழக்கு. 13 2115. | எறிபகட்டினம், ஆடுகள், ஏற்றை மா, குறி கொள் கோழி, சிவல், குறும்பூழ், நெடும் பொறி மயிர்க் கவுதாரிகள், போற்றுறு நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார். | எறி- ஒன்றை ஒன்று எறிகின்ற; பகட்டினம்- எருதுகளின் கூட்டம்; ஆடுகள்-; ஏற்றை மா- ஆண் விலங்குகள்; குறிகொள் கோழி- (தம்மை ஏவுவாரது) குறிப்பினைக் கொண்டு பொருதல் |