பக்கம் எண் :

மந்திரப் படலம் 5

     மன்னர்கள் முதலியோர் அரசனை அரண்மனையிலிருந்து பின்
தொடர்ந்துவந்தவர். சக்கரம் உடைமை, உலகு அளித்தல், தனியனாய்
இருத்தல் ஆகியவற்றால் திருமால்தயரதனுக்கு உவமை ஆயினான். யோகு-
அறிதுயில். மந்திராலோசனை ஆதலின் அன்புடையராயினும்அவர்களை
அன்புடன் அகலச்செய்தான் என்க.                                 2

வசிட்டன் வருகை  

1316.சந்திரற்கு உவமை செய் தரள வெண்குடை
அந்தரத்தளவும் நின்று அளிக்கும் ஆணையான்,
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த, தன்
மந்திரக் கிழவரை, ‘வருக’ என்று ஏவினான்.

     சந்திரற்கு உவமை செய் - சந்திரனுக்கு உவமையாக்குதற்கு உரிய ;
தரளம் வெண்குடை - முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வெண்ணிறக்
கொற்றக் குடையானது ; அந்தரத்து அளவு நின்று - விண்ணுலகம் வரை
நிற்க ; அளிக்கும் ஆணையான் - காவல் புரியும் ஆணைச் சிறப்புடைய
தசரதன் ; இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த- தேவர் தலைவனான
இந்திரனுக்கு வியாழ பகவானை ஒத்த ;  தன் மந்திரக் கிழவரை- தன்
ஆலோசனைச் சுற்றத்தவரை ;  வருக என்று ஏவினான் - வருக என்று
கட்டளையிட்டான்.

     சந்திரனைப் போன்ற வெண்கொற்றக்குடை என்று சந்திரனை
உவமையாகச்சொல்லாமல் சந்திரனுக்கு உவமையாகச் சொல்லத்தக்க
வெண்கொற்றக் குடை என்றது குடையின்ஏற்றத்தைக் குறித்தது. இது
“தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்” என்பது போன்றது ; எதிர்நிலை
யுவமையணி ஆகும். தயரதன் குடை அந்தரத்து அளவு நின்று அளித்தமை.
அவன் சம்பராசுரனைவென்று தேவலோகத்தை இந்திரனுக்கு அளித்ததனால்
விளங்கும். இமையவர் குரு - வியாழபகவான் ; பிருகஸ்பதி - மந்திரக்
கிழவர் - அமைச்சர், புரோகிதர் முதலானோர். நின்று - செய்தெனஎச்சம்
செயவென் எச்சமாகத் திரிந்தது.                                   3

1317.பூ வரு பொலன் கழல் பொரு இல் மன்னவன்
காவலின் ஆணைசெய் கடவுள் ஆம் என,
தேவரும், முனிவரும் உணரும், தேவர்கள்
மூவரின் நால்வர் ஆம், முனி வந்து எய்தினான்.

     பூ வருபொலன் கழல் - அழகு பொருந்திய பொன்னால் ஆன வீரக்
கழலை அணிந்த ;  பொரு இல் மன்னவன் காவலின் - நிகரில்லாத
அரசனான தயரதனின்ஆட்சியில் ;  ஆணை செய் கடவுள் ஆம் என -
கட்டளையிடும் கடவுளாக உள்ளான்என்னும்படி ;  தேவரும் முனிவரும்
உணரும்
- தேவர்களும் இருடிகளும் தேடி அறியும்; தேவர்கள் மூவரின்-
தேவர்களான நான்முகன், திருமால், சிவபிரான் என்றுசொல்லப்பெறும்
மூவர்களோடு சேர்த்து ;  நால்வராம் முனி