மன்னர்கள் முதலியோர் அரசனை அரண்மனையிலிருந்து பின் தொடர்ந்துவந்தவர். சக்கரம் உடைமை, உலகு அளித்தல், தனியனாய் இருத்தல் ஆகியவற்றால் திருமால்தயரதனுக்கு உவமை ஆயினான். யோகு- அறிதுயில். மந்திராலோசனை ஆதலின் அன்புடையராயினும்அவர்களை அன்புடன் அகலச்செய்தான் என்க. 2 வசிட்டன் வருகை 1316. | சந்திரற்கு உவமை செய் தரள வெண்குடை அந்தரத்தளவும் நின்று அளிக்கும் ஆணையான், இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த, தன் மந்திரக் கிழவரை, ‘வருக’ என்று ஏவினான். |
சந்திரற்கு உவமை செய் - சந்திரனுக்கு உவமையாக்குதற்கு உரிய ; தரளம் வெண்குடை - முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வெண்ணிறக் கொற்றக் குடையானது ; அந்தரத்து அளவு நின்று - விண்ணுலகம் வரை நிற்க ; அளிக்கும் ஆணையான் - காவல் புரியும் ஆணைச் சிறப்புடைய தசரதன் ; இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த- தேவர் தலைவனான இந்திரனுக்கு வியாழ பகவானை ஒத்த ; தன் மந்திரக் கிழவரை- தன் ஆலோசனைச் சுற்றத்தவரை ; வருக என்று ஏவினான் - வருக என்று கட்டளையிட்டான். சந்திரனைப் போன்ற வெண்கொற்றக்குடை என்று சந்திரனை உவமையாகச்சொல்லாமல் சந்திரனுக்கு உவமையாகச் சொல்லத்தக்க வெண்கொற்றக் குடை என்றது குடையின்ஏற்றத்தைக் குறித்தது. இது “தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்” என்பது போன்றது ; எதிர்நிலை யுவமையணி ஆகும். தயரதன் குடை அந்தரத்து அளவு நின்று அளித்தமை. அவன் சம்பராசுரனைவென்று தேவலோகத்தை இந்திரனுக்கு அளித்ததனால் விளங்கும். இமையவர் குரு - வியாழபகவான் ; பிருகஸ்பதி - மந்திரக் கிழவர் - அமைச்சர், புரோகிதர் முதலானோர். நின்று - செய்தெனஎச்சம் செயவென் எச்சமாகத் திரிந்தது. 3 1317. | பூ வரு பொலன் கழல் பொரு இல் மன்னவன் காவலின் ஆணைசெய் கடவுள் ஆம் என, தேவரும், முனிவரும் உணரும், தேவர்கள் மூவரின் நால்வர் ஆம், முனி வந்து எய்தினான். |
பூ வருபொலன் கழல் - அழகு பொருந்திய பொன்னால் ஆன வீரக் கழலை அணிந்த ; பொரு இல் மன்னவன் காவலின் - நிகரில்லாத அரசனான தயரதனின்ஆட்சியில் ; ஆணை செய் கடவுள் ஆம் என - கட்டளையிடும் கடவுளாக உள்ளான்என்னும்படி ; தேவரும் முனிவரும் உணரும் - தேவர்களும் இருடிகளும் தேடி அறியும்; தேவர்கள் மூவரின்- தேவர்களான நான்முகன், திருமால், சிவபிரான் என்றுசொல்லப்பெறும் மூவர்களோடு சேர்த்து ; நால்வராம் முனி |