குறிக்கப்பட்டுள்ளமை ஒப்புநோக்கற்கு உரியது. மன்உயிர்க்கு, அவற்கு - வேற்றுமை மயக்கங்கள்;‘கு’ உருபு ஏழாம் வேற்றுமையில் மயங்கியது. 82 தயரதன் இராமனை மன்னர்க்குக் கையடை ஆக்குதல் 1396. | மொழிந்தது கேட்டலும், மொய்த்து நெஞ்சினைப் பொழிந்த பேர் உவகையன், பொங்கு காதலன், ‘கழிந்தது என் துயர்’ எனக் களிக்கும் சிந்தையன், வழிந்த கண்ணீரினன், மன்னன் கூறுவான். |
மொழிந்தது கேட்டலும் - அவ்வாறு அவையில் இருந்தவர் கூறியதைக் கேட்டவுடனே; மன்னன் - அரசனாகிய தயரதன்; நெஞ்சினை மொய்த்து - மனத்தினில் முழுதும் நிரம்பி;பொழிந்த பேர் உவகையன் - வெளிப்பட்ட மிக்க மகிழ்ச்சியையுடையவனும்; பொங்குகாதலன் - மேலிடுகின்ற அன்பையுடையவனும்; கழிந்தது என்துயர் என - ‘துன்பம் நீங்கியவனானேன்’என்று; களிக்கும் சிந்தையன் - களிப்பை வெளிப்படுத்தும் மனத்தை யுடையவனும்; வழிந்தகண்ணீரினன் - மகிழ்ச்சியால் தானே வழிந்த கண்ணீரையுடையவனுமாகி; கூறுவான் - சொல்வான் ஆயினான். நெஞ்சினை - வேறுமை மயக்கம்; நெஞ்சில் என ஏழாம் வேற்றுமை பொருளது. 83 1397. | ‘செம்மையின், தருமத்தின், செயலின், தீங்கின்பால் வெம்மையின், ஒழுக்கத்தின் மெய்ம்மை மேவினீர். என் மகன் என்பது என் ? நெறியின், ஈங்கு, இவன் நும் மகன்; கையடை; நோக்கும் ஈங்கு’ என்றான். |
‘செம்மையின் - (தயரதன் அரசர்களை நோக்கி) நடுநிலைமையிலும்; தருமத்தின்- அரசியல் அறத்திலும்; செயலின் - நற் செய்கையிலும்; தீங்கின்பால் வெம்மையின்- திச்செயல்களில் கொண்ட வெறுப்பிலும்; ஒழுக்கத்தின் நடத்தையிலும்; மெய்மை மேவினீர்- உண்மையாக இருப்பவர்களே!; இவன் ஈங்கு - இவ்விராமன் இனிமேல்; என்மகன் என்பது என் - என் பிள்ளை என்று சொல்லுவது ஏன்?; நும் மகன் - உங்கள்பிள்ளையாவான்; கையடை - அவனை உங்களிடம் அடைக்கலமாக்கினேன்; ஈங்கு நோக்கும்என்றான் - இங்கே அவ்வாறே கருதிப்பேணுங்கள்’ என்றான். இவனை என்மகன் என்ன வேண்டா; உங்கள் மகனாகக் கொண்டு போற்றுங்கள் எனத் தயரதன் கூறினான்.நோக்கும் - பேணுங்கள்; முன்னிலை வினைமுற்று. 84 |