எல்லோரும் புலம்பி அழுதார்கள்; வானமகளிரும் - (அப் புலம்பலைக் கேட்ட) தேவமகளிரும்; இரங்கிபோய் - இரக்கம் (மிக்குப்) போய்; வாய் திறந்து மாழ்கினார் - வாயைத் திறந்து அழுதனர்; ஏனை மகளிர் நிலை - அரக்க மகளிரது நிலைமை; என் ஆகும் - என்னவாகும்? | தலைமயங்கி - ஒன்றுகூடி, ஏனை மகளிர் - அரக்க மகளிர் என்க. மாழ்குதல் - அழுது புலம்பல். | (274) | 8001.
| தார் அகலத்து அண்ணல் தனிக் கோயில் தாசரதி பேர, உலகு உற்றது உற்றதால், பேர் இலங்கை; ஊர் அகலம் எல்லாம், அரந்தை, உவா உற்ற ஆர்கலியே ஒத்தது, அழுத குரல் ஓசை. | பேர் இலங்கை - பெரிய இலங்கை மாநகரம்; தார் அகலத்து அண்ணல் - மாலையை மார்பில் அணிந்த தலைவனாகிய; தாசரதி - ‘தசரத ராமன்; தனிக் கோயில் - ஒப்பற்ற தன் அரண்மனையிலிருந்து; பேர - (காடு நோக்கிச்) செல்ல; உலகு உற்றது உற்றதால் - உலகம் அடைந்த துன்பத்தை அடைந்தது; ஊர் அகலம் எல்லாம் - ஊர்ப்பரப்பு முழுவதும்; அரந்தை - தோன்றிய துன்பம் கலந்த; அழுத குரலோசை - அழுங்குரலோசை; உவா உற்ற-முழு மதி நாளில் தோன்றிய; ஆர்கலியே ஒத்தது - கடலின் ஓசையை ஒத்து விளங்கியது. | இலங்கை இராமன் காடேகிய போது உலகம் அடைந்த துன்பத்தை அடைந்து. அங்குத் தோன்றிய அழுகுரலோசை முழு மதிநாளின் கடல் ஓசையை ஒத்திருந்தது. அகலம் - மார்பு, தாசரதி - தசரதன் மைந்தன், இராமன். கோயில் - அரண்மனை, அரந்தை - துன்பம், உவா - முழுமதி, ஆர்கலி - கடல். | (275) |
|
|
|