பரிவின்- (மனத்தின்கண் நிகழும்) அன்பிரக்கத்தோடு; மன்னனை -தயரத மன்னனது உடலை; அவ்வயின் - அஃதுள்ள இடத்தினின்றும்; சுற்றும் பற்றிவாங்கினார் - நாற்பக்கமும் இருந்து தம் கையாற் பற்றி எடுத்து; கொற்ற மண்கணை குமுற- வெற்றி தரும் வீரமுரசம் பேரொலி செய்ய; மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினார்- வேறொரு பொன்னாலியன்ற பெரிய விமானத்தில் எற்றினர். வேதம் எழுதாக் கிளவியாதலின் கற்றார் என்னாது கேள்வியார் என்றார். உடலை எடுத்தல், ஏற்றுதல் ஆகிய அனைத்திற்கும் மந்திரமும், தந்திரமும் உண்டாதலின் விமானம் ஏற்றுதலைஅந்தணர் மேற்றாக்கினார். 125 2227. | கரை செய் வேலைபோல், நகரி, கை எடுத்து, உரை செய் பூசலிட்டு, உயிர் துளங்குற, அரச வேலை சூழ்ந்து, அழுது, கைதொழ, புரசை யானையில் கொண்டு போயினார். |
நகரி- நகரத்திள் உள்ளார்; கரை செய் வேலை போல் - தனக்குரிய கரையைத் தானே செய்துகொள்ளும் கடலைப் போல்; கையெடுத்து உரை செய் பூசலிட்டு - மிகவும் கூக்குரலெடுத்துஆரவாரித்து; உயிர் - தம்முயிர் நிலைகுலையவும்; அரச வேலை - அரசர்களாகிய கடல்; சூழ்ந்து - சுற்றிவந்து; அழுது கைதொழ- புலம்பி வணங்கவும்; புரசை யானையின்- மணிகட்டப்பட்ட கயிற்றினைப் பிடரியின் கண் உடைய யானை மேல்; கொண்டு போயினார்- கொண்டு சென்றார்கள். விமானத்தை யானைமேற் கொண்டு சென்றார் என்க. கொண்டு சென்றார் ‘கேள்வியர்’ எனமேற்வாட்டின்கண் உள்ள எழுவாய் வருவித்து முடிக்க. 126 சாப்பறை முதலியன ஒலித்தல் 2228. | சங்கு பேரியும், தழுவி சின்னமும் எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ, மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் எனப் பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே. |
சங்கு- சங்குகளும்; பேரியும் - சாப்பறையும்; தழுவு சின்னமும் - இறப்பின் கண்ஊதப்படுகின்ற கொம்புகளும்; எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ எல்லாப்பக்கங்களிலும் இருந்து கேட்பவர்க்குத் துன்பமுண்டாம்படி அமுதாற்போல ஒலிக்கின்றவை; மங்குல்நோய் நகர் - மேகங்கள் வந்து படியப் பெறுகின்ற நகரம்; மகளிராம் என -(தானே) பெண்களைப் போலிருந்து; பொங்கு கண் புடைத்து - துன்ப மிகுதியுடைய கண்களைஅடித்துக்கொண்டு; அழுவ போன் அழுகின்றவை போன்றன. |