பறை முதலியன ஒலித்தல் நகரமே கண்புடைத்து அழுதல் போலும், கண் புடைத்து அழுதல்‘மகளிர்போல’ என்று கூறினார். பேரி - பெருமுரசு. இங்குச் சாப்பறை ஆம். 127 தயரதன் உடலம் சரயு நதி அடைதல் 2229. | மாவும், யானையும், வயங்கு தேர்களும், கோவும், நான் மறைக் குழுவும், முன் செல, தேவிமாரொடும் கொண்டு, தெண் திரை தாவு வார் புனல் சரயு எய்தினார். |
மாவும் - குதிரைகளும்; யானையும் - யானைகளும்; வயங்கு - விளங்குகின்ற; தேர்களும் -; கோவும் - அரசர்களும்; நான்மறைக் குழுவும் -நான்மறையாளர் கூட்டமும்; முன்செல - முன்னே செல்ல; கொண்டு - (தயரதனதுபிரேதத்தைக்) கொண்டுசென்று; தேவிமாரொடும் - (தயரதன்) மனைவிமாருடனே; தெண்திரைதாவு - தெள்ளிய அலைகள் தாவுகின்ற; வார் புனல் - மிக்க தண்ணீரை உடைய; சரயுஎய்தினார் - சரயு நதியை அடைந்தார்கள். தேவிமார் அறுபதினாயிரவர். “தேவிமாரை இவற்குரிமை செய்யும் நாளில் செந்தழலில், ஆவிநீத்திர் என இருத்தி” (1915.) என்பது காண்க. 128 தயரதனை ஈமப்பள்ளி ஏற்றி, பரதனை இறுதிக்கடன் செய்ய அழைத்தல் 2230. | எய்தி, நூலுளோர் மொழிந்த யாவையும் செய்து, தீக் கலம் திருத்தி, செல்வனை, வெய்தின் ஏற்றினார்; ‘வீர! நுந்தைபால் பொய் இல் மாக் கடன் கழித்தி போந்து’ என்றார். |
(நான்மறைக் கேள்வியார்) எய்தி - (சரயு நதியை) அடைந்து; நூல் உளோர்மொழிந்த யாவையும் செய்து- (ஸ்மிருதி) நூல்களை உடையோர் சொல்லிய விதிகள் எல்லாம்செய்து முடித்து; தீக்கலம் திருத்தி - தீச்சட்டியை ஒழுங்குபடுத்தி; செல்வனை -தயரதனை; வெய்தின் - விரைவாக; ஏற்றினார் - (ஈமப்பள்ளியில்) ஏற்றிவைத்து;(பரதனை நோக்கி) ‘வீர! - வீரனே!; நுந்தைபால் - உன்தந்தையிடத்து; பொய்இல் மாக்கடன்- (நீ செய்ய வேண்டிய ) வேதவழி பிறழாத பெருங்கடமையை; போந்து கழித்தி - வந்து செய்வாயாக;’ என்றார் -. பிறப்பு, இறப்புச் சடங்குகள் பற்றிக் கூறுவன ‘ஸ்மிருதி நூல்கள்’ எனப்படுதலின், அவற்றைஅறிந்தவரையே இங்கு ‘நூலுளோர்’ என்றார் என்க. 129 |