பக்கம் எண் :

554அயோத்தியா காண்டம்

மா தவன் - பெருந்தவம் செய்த வசிட்டமுனிவன்; ‘உலகம் காக்குதி -
இந்த அரசாட்சியைப்பாதுகாப்பாய்; இது - இத்தரணி தாங்குதல்; நின்
கடன் ஆம்
- நீ (எற்றுச்)செய்யவேண்டிய கடமையாகும்; என -; கோக்
குமரனுக்கு
- அரச குமாரனாகிய பரதனுக்கு; அது - அரசின் சிறப்பும்
இன்றியமையாமையும; தெரிய - விளங்கும்படி; கூறுவான்-
எடுத்துரைக்கலானான்.

     ‘நோக்கு’ என்பது வெறும் பார்வையன்று; ‘மனத்தால் நோக்குத’ லாகும்.
இதனை ‘இரண்டன்மருங்கின் நோக்கல் நோக்கம்’ என்னும் தொல்காப்பியச்
சூத்திரத்துக்குச் சேனாவரையர்எழுதிய உரையான் உணர்க். (தொல். சொல்.
வேற். மயங்.) மந்திராலோசனையில் முதற்கண்அமைச்சர் தொடங்கலே
முறை என்பது  இதனால் அறியப்பெறும்.                            4

வசிட்ட முனிவன் பரதனுக்கு அரசின் சிறப்பை உரைத்தல்  

2248.‘வேதியர், அருந் தவர், விருத்தர், வேந்தர்கள்
ஆதியர் நின்வயின் அடைந்த காரியம்,
நீதியும் தருமமும் நிறுவ; நீ இது,
கோது அறு குணத்தினாய்! மனத்துக் கோடியால்

    ‘கோதறு குணத்தினாய்!- குற்றமற்ற குணத்தை உடைய (பரதனே)
வனே!;  வேதியர் - அந்தனர்;  அருந்தவர் - அரியதவம் செய்த முனிவர்;
விருத்தர் - (அநுபவத்தால்) முதிர்ந்த பெரியோர்; வேந்தர்கள் - அரசர்கள்;
ஆதியர் - முதலானோர்; நின்வயின் -உன்னிடத்து; அடைந்த காரியம் -
வந்து சேர்ந்த செயல்;  நீதியும் -(மக்களுக்கு நன்மை செய்ய உள்ள) அரச
நீதியையும்;  தருமமும் - (அவரவர் செயலை அவரவர்செய்தற்குத்
தடையிலாத) அரச தர்மத்தையும்; நிறுவ - (அரசன் இல்லாமையால்
சிதையாவண்ணம்)நிலை நிறுத்தவே; நீ-; இது - இச்செயலை; மனத்துக்
கோடி
- மனத்தின் கண்நினைத்துக் கொள்வாயாக.’

     அரச நீதியாவது எளியரை வலியர் வாட்டாது பாதுகாத்தலாகும்.
“மாநிலங்காவலனாவான்மன்னுயிர் காக்கும் காலைத்; தான் அதனுக்கு
இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்; ஊனமிகுபகைத்திறத்தால் கள்வரால்
உயிர்தம்மால், ஆனபயம் ஐந்தும் தீர்த்து அறங்காப்பான்அல்லனோ?”
என்னும் (பெரிய. திருந. 36) பெரிய புராணச் செய்யுளான் அறிக. அரச
தருமம் -குறைவேண்டுவார்க்கு அது நிரப்புதலாம். முறை வேண்டுநர்க்கும்,
குறை வேண்டுநர்க்கும் அரசன்காட்சிக்கெளியனாய் அது தீர்த்தலையே
(குறள் 386. பரி. உரை) நீதியும் தருமமும் எனஇரண்டாகக் கம்பர்
வசிட்டன் வாக்கால் கூறினார்.                                     5

2249. ‘தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது அறிதி ஐய! நீ
இருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டு, இது,
தெருள் மனத்தார் செய்யும் செயல் இது ஆகுமால்.