மா தவன் - பெருந்தவம் செய்த வசிட்டமுனிவன்; ‘உலகம் காக்குதி - இந்த அரசாட்சியைப்பாதுகாப்பாய்; இது - இத்தரணி தாங்குதல்; நின் கடன் ஆம் - நீ (எற்றுச்)செய்யவேண்டிய கடமையாகும்; என -; கோக் குமரனுக்கு - அரச குமாரனாகிய பரதனுக்கு; அது - அரசின் சிறப்பும் இன்றியமையாமையும; தெரிய - விளங்கும்படி; கூறுவான்- எடுத்துரைக்கலானான். ‘நோக்கு’ என்பது வெறும் பார்வையன்று; ‘மனத்தால் நோக்குத’ லாகும். இதனை ‘இரண்டன்மருங்கின் நோக்கல் நோக்கம்’ என்னும் தொல்காப்பியச் சூத்திரத்துக்குச் சேனாவரையர்எழுதிய உரையான் உணர்க். (தொல். சொல். வேற். மயங்.) மந்திராலோசனையில் முதற்கண்அமைச்சர் தொடங்கலே முறை என்பது இதனால் அறியப்பெறும். 4 வசிட்ட முனிவன் பரதனுக்கு அரசின் சிறப்பை உரைத்தல் 2248. | ‘வேதியர், அருந் தவர், விருத்தர், வேந்தர்கள் ஆதியர் நின்வயின் அடைந்த காரியம், நீதியும் தருமமும் நிறுவ; நீ இது, கோது அறு குணத்தினாய்! மனத்துக் கோடியால் |
‘கோதறு குணத்தினாய்!- குற்றமற்ற குணத்தை உடைய (பரதனே) வனே!; வேதியர் - அந்தனர்; அருந்தவர் - அரியதவம் செய்த முனிவர்; விருத்தர் - (அநுபவத்தால்) முதிர்ந்த பெரியோர்; வேந்தர்கள் - அரசர்கள்; ஆதியர் - முதலானோர்; நின்வயின் -உன்னிடத்து; அடைந்த காரியம் - வந்து சேர்ந்த செயல்; நீதியும் -(மக்களுக்கு நன்மை செய்ய உள்ள) அரச நீதியையும்; தருமமும் - (அவரவர் செயலை அவரவர்செய்தற்குத் தடையிலாத) அரச தர்மத்தையும்; நிறுவ - (அரசன் இல்லாமையால் சிதையாவண்ணம்)நிலை நிறுத்தவே; நீ-; இது - இச்செயலை; மனத்துக் கோடி - மனத்தின் கண்நினைத்துக் கொள்வாயாக.’ அரச நீதியாவது எளியரை வலியர் வாட்டாது பாதுகாத்தலாகும். “மாநிலங்காவலனாவான்மன்னுயிர் காக்கும் காலைத்; தான் அதனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்; ஊனமிகுபகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால், ஆனபயம் ஐந்தும் தீர்த்து அறங்காப்பான்அல்லனோ?” என்னும் (பெரிய. திருந. 36) பெரிய புராணச் செய்யுளான் அறிக. அரச தருமம் -குறைவேண்டுவார்க்கு அது நிரப்புதலாம். முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கும் அரசன்காட்சிக்கெளியனாய் அது தீர்த்தலையே (குறள் 386. பரி. உரை) நீதியும் தருமமும் எனஇரண்டாகக் கம்பர் வசிட்டன் வாக்கால் கூறினார். 5 2249. | ‘தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் அருமை என்பது பெரிது அறிதி ஐய! நீ இருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டு, இது, தெருள் மனத்தார் செய்யும் செயல் இது ஆகுமால். |
|