‘ஐய! நீ-;தருமம் என்று ஒரு பொருள் - அறம் என்று சொல்லப் படுகின்ற ஒப்பற்ற ஒரு பொருளை; தந்து - உலகிற்குத் தந்து (மக்கள் அனைவரையும் மேற்கொள்ளுமாறு செய்து); நாட்டுதல்-நிலைநிறுத்துதல்; அருமை என்பது - மிகவும் அருமையான செயல் என்பதனை; பெரிது அறிதி - நன்கு அறிவாய்; ஈண்டு - இவ்விடத்தில்; இது - இவ்வறம்; இருமையும் -இம்மை, மறுமை ஆகிய இரண்டையும்; தருவதற்கு -; இயைவது - பொருந்தியதாகும்; இது -இவ்வறம்; தெருள்மனத்தார் - தெளிவுபெற்ற மனம் உடைய மேலோர்; செயும் செயல்ஆகும் - செய்யும் செயலாகும். அறத்தின் சிறப்பும்; அது மேலோர்களால் மேற்கொள்ளப்பெற்றது என்பதும் கூறியதாகும்.“இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார், பெருமை பிறங்கிற்று உலகு” (குறள். 23) என்பதனைஒப்பு நோக்குக. ‘ஆல்’ அசை. 6 2250. | ‘வள் உறு வயிர வாள் அரசு இல் வையகம், நள் உறு கதிர் இலாப் பகலும், நாளொடும் தெள்ளுறு மதி இலா இரவும், தேர்தரின், உள் உறை உயிர் இலா உடலும், ஒக்குமே. |
‘தேர்தரின்- ஆராயும்பொழுது; வள்உறு வயிரவாள் அரசு - வளமை பொருந்திய வன்மையான வாளையுடையஅரசனை; இல்வையகம் - பெறாத உலகம்; நள் உறு கதிர் இலாப் பகலும் - (எல்லோராலும்) விரும்பப்படுகின்ற சூரியன் இல்லாத பகலையும்; நாளொடும் - விண்மீன்களோடும்; தெள்ளுறு மதி இலா இரவும் - தெளிந்த வெண்மையான சந்திரன் இல்லாத இரவையும்; உள்உறைஉயிர் இலா உடலும் - உள்ளே பொருந்திய உயிர் இல்லாத உடலையும்; ஒக்கும் - போலும்.’ வன் - கூர்மை என்றுமாம். சூரியன் அழிக்கும் ஆற்றல், சந்திரன் தண்மையால் காக்கும்ஆற்றல், உயிர் உடலை இயக்கும் ஆற்றல், உயிர் உடலை இயக்கும் ஆற்றல் இம்மூன்றையும் அரசன்உடையனாதலின் அவற்றை இவ்வுவமைகளால் விளக்கினார். பகைவரை அழித்து, நல்லோரைக் காத்து,மக்களை இயங்கச்செய்ய மன்னவன் தேவை. தெறலும், தண்ணளியும் உடையனாய் உல்கை நல்வழியில்இயங்கச் செய்பவன் மன்னன் என்பது இதனால் உணரப்பெறும். மன்னர், மக்கள் - உயிர், உடல்- இக்கருத்தை 177, 1423 ஆம் பாடல்களோடு ஒப்பிடுக. 7 2251. | ‘தேவர்தம் உலகினும், தீமை செய்து உழல் மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும், ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம். |
‘தேவர்தம் உலகினும் - தேவலோகத்திலும்; தீமை செய்து உழல்- பிறர்க்குத் தீமையே செய்து திரிகின்ற; மா வலி அவுணர்கள் |