வைகும் நாட்டினும்- பெருவலி படைத்த அசுரர்கள் தங்கியுள்ள நாடுகளிலும்; ஏ எவை உலகம் என்று இசைக்கும்அன்னவை - எவை எவைகள் உலகம் என்று பெயர்பெறுமோ அவைகள் எல்லாம்; காவல் செய் தலைவரை இன்மை - தம்மைக் காக்கின்ற அரசர்கள் இல்லாமல் இருத்தலை; கண்டிலம்- (யாம்) பார்த்திலோம்.’ நல்லோராயினும், அல்லோராயினும் நாட்டிற்கு ஆள்வோர் இன்றியமையாதவர் என்பது இதனாற்கூறியதாம். உலகம் என்றாலே அரசன் வேண்டும் என்றார். 8 2252. | ‘முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின், மறையவன் வகுத்தன, மண்ணில், வானிடை, நிறை பெருந் தன்மையின் நிற்ப, செல்வன, இறைவரை இல்லன யாவும் காண்கிலம், |
‘முறை தெரிந்து - முறைமையை நன்கு ஆராய்ந்து; ஒருவகை முடிய நோக்குறின் -ஒருபடித்தாக இறுதிவரை பார்த்தால்; மறையவன் வகுத்தன - பிரமனால் படைக்கப்பட்டனவாகிய;மண்ணில் வானிடை - நிலத்திலும், விண்ணிலும்; நிறை பெருந்தன்மையின் - நிறைந்துவிளங்கும் பேரியல்போடு; நிற்ப -நிலைத்து நிற்பன; செல்வன - இயங்குவன (வாகிய பொருள்களில்); இறைவரை இல்லன - தலைவரைப் பெற்றிராத பொருள்கள்; யாவும் எவையும்; காண்கிலம் - காண்கின்றிலோம். (யாம்)’ உலகிற்கு - மன்னர் இன்றியமையாமை மேல் கூறியது. இங்குச் சரம், அசுரம் ஆகிய இயங்கும்,இயங்காப் பொருள்களுக்கும் தலைவர் இன்றியமையாமை உணர்த்தப்பெற்றது. ‘நிற்ப’ என்பன மலை,மரம் முதலியன. ‘செல்வ’ என்பன மக்கள், விலங்கு, பறவை முதலிய உயிர்களாம். அவற்றிடையேகூடஒரு தலைமை என்பது உண்டு என்பது அறியப்படும். 9 2253. | ‘பூத்த, நாள்மலர் அயன் முதல புண்ணியர் ஏத்து, வான் புகழினர், இன்றுகாறும் கூக் காத்தனர்; பின், ஒரு களைகண் இன்மையால், நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால். |
‘பூத்த - (திருமாலின் திருஉத்தியில்) உண்டான; நாள்மலர் - அன்றலர்ந்தாற் போன்ற தாமரை மலரில் தோன்றிய; அயன் முதல புண்ணியர் - பிரமதேவன்முதலிய மேலோர்களால்; ஏத்து - பாராட்டப் பெறுகின்ற; வான் புகழினர் -சிறந்த புகழைப் பெற்ற (உன்) முன்னோர்கள்; இன்றுகாறும் - இன்று வரையிலும்; கூ -(இந்தப் ) பூமியை; காத்தனர் - (அரசு நடத்திக்) காத்தார்கள்; பின் -இப்போது; ஒரு களைகண் இன்மையால் - (நீ அரசன் ஆகாதபடியால்) |