பக்கம் எண் :

ஆறு செல் படலம் 557

தமக்கொரு துன்பம் நீக்கிப் பாதுகாப்பாரை  இல்லாமையால்; (இவ்வுலகம்)
நீத்த நீர்
- கடலின்கண்; உடைகல நீரது - உடைந்த கப்பல் தத்தளிப்பது
போன்றது; ஆகும் -.’

     ‘நீத்த’ம் என்பது வெள்ளம் ஆதலின், நீர் நீத்தம் எனவே ‘கடல்’
என்று பொருள்ஆயிற்று. கடலின்கண் உடைந்த கப்பல் தவிப்பதைப்போல
அரசன் இல்லாத நாடு அலமரும் என்றதாம்.‘ஆல்’ அசை.             10

2254.‘உந்தையோ இறந்தனன்; உம்முன் நீத்தனன்;
வந்ததும், அன்னைதன் வரத்தில்; மைந்த! நீ
அந்தம் இல் பேர் அரசு அளித்தி; அன்னது
சிந்தனை எமக்கு’ எனத் தெரிந்து கூறினான்.

     ‘மைந்த! - பரதனே!; உந்தையோ இறந்தனன் - உன் தந்தையாகிய
தயரதனோஇறந்துபட்டான்; உம் முன் - உன் தமயனாகிய இராமனோ
(தந்தை சொற்கேட்டு); நீத்தனன் - (அரசைக்) கைவிட்டுக் கானகம்
புகுந்தான்;  வந்ததும் - (இந்த அரசுஉனக்குக்) கிடைத்திருப்பதும்;
அன்னை தன் வரத்தில்
- உன் தாயாகிய கைகேயியின்வரத்தால் ஆகும்;
நீ அந்தம் இல் பேரரசு அளித்தி - நீ அழிவற்றதாகிய இந்தக்கோசலத்
தரசை ஏற்று நடத்துக; அன்னது - (அவ்வாறு) நீ அரசு ஏற்பது; எமக்குச்
சிந்தனை
- எங்களுக்கு எண்ணம்;’ என - என்று; தெரிந்து  கூறினான் -
ஆராய்ந்து சொன்னான்.

     மரபு வழித் தொன்றுதொட்டு வந்த அரசு என்பான், ‘அந்தம் இல்
பேரரசு’ என்றான் எனினும்அமையும்.                              11

வசிட்டன் சொற் கேட்ட பரதன் அவல நிலை அடைதல்  

2255.‘தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்’ எனச்
செஞ்சேவே முனிவரன் செப்பக் கேட்டலும்,
‘நஞ்சினை நுகர்’ என, நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன் - அருவிக் கண்ணினான்.

     ‘இவ் உலகம் - இந்த உலகம்; தஞ்சம் - (உனக்கு) அடைக்கலம்; நீ
தாங்குவாய்
- நீ (அரசனாக இருந்து) பாதுகாப்பாய்; என - என்று;
முனிவரன் -முனிவர்களில் மேலான வசிட்டன்; செஞ்செவே -
செம்மையாக; செப்பக் கேட்டலும்- சொல்லக் கேட்டவளவில்; அருவிக்
கண்ணினான்
- அருவிபோலக் கண்ணின் நீர் ஒழுகும்பரதன்; ‘நஞ்சினை
நுகர்’ என
- விடத்தை உண்பாயாக என்று ஒருவர் சொல்ல;  (அதுகேட்டு)
நடுங்குவாரினும் - நடுங்குகின்றவர்களைவிட; அஞ்சினன் அயர்ந்தனன்த-
பயந்து சோர்ந்தான்.