பக்கம் எண் :

558அயோத்தியா காண்டம்

     ‘மகனே!  உனை, மாநிலம் தஞ்சமாக நீ தாங்கு’ என்ற வாசகம் (1614.)
என்ற கோசலை கூற்றுஇங்கு முதலடியோடு ஒப்பு நோக்கத்தக்கது.
அயோத்திக்கு வந்தது  முதல் அமுத வண்ணமாக இருக்கின்றபரதனுக்கு
‘அருவிக் கண்ணினான்’ என்பது  ஒரு பெயராகக் கொள்க.             12

2256.நடுங்கினன்; நாத் தடுமாறி, நாட்டமும்
இடுங்கினன்; மகளிரின் இரங்கும் நெஞ்சினன்;
ஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதர,
தொடங்கினன், அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்;

     (பரதன்), நடுங்கினன் - (முனிவன் சொன்னதைக் கேட்டு) நடுங்கி;
நாத்தடுமாறி - (பேசுதற்கியலாமல்) நாக் குழறி; நாட்டமும் இடுங்கினன் -
கண்கள்(குழிவிழுந்து ) உள்செல்லப் பெற்று;  மகளிரின் - பெண்களைப்
போல; இரங்கும் நெஞ்சினன்- நெஞ்சினாற் புலம்பிக் கொண்டு; ஒடுங்கிய
உயிரினன்- மூச்சு ஓடுங்கப்பெற்று(மூர்ச்சித்து); உணர்வு கைதர - (பின்னர்)
மூச்சு எழும்பி உணர்வு வரப்பெற; அரசவைக்கு- அரசவையில் உள்ளவர்க்கு;
உள்ளம் - தன் மனக்கருத்தை; சொல்லுவான் தொடங்கினன் - சொல்லத்
தொடங்கினான்.

     துக்கம் வந்தவுடன் அறிவழிந்து  புலம்பல் மகளிர் இயல்பு -
“பெட்டைப் புலம்பல்பிறர்க்குத் துணையாமோ’ (பாஞ்சாலி சபதம் 62. 22.)
என்ற பாரதி பாடல் காண்க.                                     13

பரதன் தன் மனக் கருத்தை அரசவைக்கு எடுத்துச் சொல்லுதல்  

2257.‘மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய், முதல்
தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல்,
சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால்,
ஈன்றவன் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ?

    ‘மூன்று உலகினுக்கும்- மேல், நடு, கீழ் என்னும் மூன்று இடங்களில்
உள்ள மூன்று உலகங்களுக்கும்; ஓர் முதல்வன்ஆய்
- ஒப்பற்ற
முதற்பொருளாகி; முதல் தோன்றினன் இருக்க - (எனக்கு) முன்னே
பிறந்தவனாகிய இராமன் இருக்கின்ற போதே;  யான் மகுடம் சூடுதல் -
யான் அரசனாக அரசுகட்டில் ஏறி மணிமகுடத்தைச் சூடிக்கொள்ளுதல்;
சான்றவர் உரைசெய - பெரியோர்கள்தக்கதே என்ற தம் வாயால்
எடுத்துரைக்க; தருமம் ஆதலால் - அறம் என்று கருதப்படுகின்றது
ஆதலாம்;  ஈன்றவள் செய்கையில் - (இதே செயலைச் செய்த) என்னைப்
பெற்றதாயாகிய கைகேயியின் செயற்பாட்டில்;  இழுக்கு உண்டாகுமோ -
தவறு உளதாகுமா?’

     ‘மூத்தவன் இருக்க இளையவனாகிய நான் அரசு புரிவது  தருமம்
என்று வசிட்டரே கூறினால்கூறினால் என்தாய் கூறியதில் என்ன தவறு?
என்கிறான் பரதன்.