பக்கம் எண் :

566அயோத்தியா காண்டம்

 காசையின் கரியவற் காண மூண்டு எழும்
ஆசையின் நிமிர்ந்தது அவ் அனிக ராசியே.

     ‘ஒல்’ என் பேர் ஒலி - (சேனைகளின் எழுச்சியால் உண்டாகிய)
‘ஒல்’ என்றபெரிய ஆரவாரம்;  ஈசன் - (அழித்தற் கடவுளாகிய) சிவன்;
இவ் உலகினை அழிக்கும்நாள் - இந்த உலகினை அழித்துச் (சர்வ
சங்காரம்) செய்யும் காலத்தில்; எழும்ஓசையின் - எழுகின்ற
பேரோசையைவிட;  நிமிர்ந்துளது - மேற்சென்றுளது; அவ்அனிகராசி -
அந்தச் சேனைத் தொகுதி; காசையின் கரியவன் - காயாம்பூப் போலும்
கருநிறமுடைய இராமனை;  காண மூண்டு எழும் ஆசையின் -
காண்பதற்காக உள்ளே கிளர்ந்து எழுகின்ற ஆசையைக் காட்டிலும்;
நிமிர்ந்தது - மேற்சென்றுவிட்டது (அதிகமாய் உள்ளது.)

     ஈசன் என்பது சிவனுக்குரிய சிறப்புப் பெயர். “ஈசன் ஆண்டிருந்த
பேர் இலங்கு மால்வரை”(3360.) என்பது காண்க. காசை - காயாம்பூ. “நீல
நெடுங்கிரியும் மழைமுகிலும் பவ்வ நெடு நீரும்காயாவும் நிகர்க்கும் மேனிக்,
கோலமும்” (வில்லி. 45. 247.) என்பது திருமாலின் திருமேனிநிறத்துக்குக்
காயாம்பூவை உவமை கூறிற்றாம். காசு- குற்றம் என்பார் உளர். ‘காசை’ என
வருதலின் அது  பொருந்தாது. ‘காசில்’ என்று வரின் பொருந்தும். ‘காசில்
கொற்றத் திராமன்’என்பது (4) போல, காசு - ஐ எனப் பரித்து ‘ஐ’ சாரியை
என்றாலோ எனின், அவ்வாறு சாரியைகூறுவது  ஓர் மரபின்மையே அன்றி
வேறின்றி. ஏற்குமேற் கொள்க. ‘ஓசையின்’, ‘ஆசையின்’இரண்டிடங்களிலும்
‘இன்’ உறழ்ச்சிப் பொருட்டு. ‘காசையின்’  ‘இன்’ உவமப் பொருட்டு. ‘ஏ’
காரம் ஈற்றசை.                                               27

2271.படியொடு திரு நகர் துறந்து, பல் மரம்
செடியோடு தொடர் வனம் நோக்கி, சீதை ஆம்
கொடியொடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப்
பிடியொடு நடந்தன - பெருங் கை வேழமே.

     பெருங்கை வேழம்- (சேனையில் உள்ள) பெரிய துதிக்கையையுடைய
களிற்று யானைகள்; பிடியொடு - (தம்) பெண் யாணைகளுடனே; படியொடு
திருநகர் துறந்து -
பூவுலகஆட்சியோடு அழகிய அயோத்தி நகரத்தையும்
விட்டு; செடியொடு பல்மரம் தொடர் வனம்நோக்கி - செடிகளோடு
பல மரங்கள் ஒன்றை ஒன்று பற்றி நெருங்கியுள்ள காட்டை நோக்கி;சீதை
ஆம் கொடியொடு -
சீதாபிராட்டி யென்கின்ற கொடியுடனே; நடந்த -
நடந்து சென்ற; அக் கொண்டல் ஆம் என - அந்த மேச நிறனாகிய
இராமன் போல; நடந்தன - நடந்து சென்றன.

     யானைக்கு இராமனும்,  பிடிக்கும் பிராட்டியும் கொள்க. ‘ஏ’ காரம்
ஈற்றசை. ‘கொண்டல்’என்பது இராமனுக்கு உருவகம். நிறத்தினால் அன்றிப்
பயனாலும் (தன் அடைந்தோர்க்குத் தண்ணளிவிளைத்தலால்) இராமனுக்கு