கோலத்தை; காண்கிலா - காணப்பெறாத; மாதரின் - பெண்கள் போல; நுடங்குவ - அசைகின்றனவாயின. கொடிகள் வானளாவி மேகத்தைத் தொடுவதும், அசைவதும் சேனைகளின் வெயில் வெம்மை தணிக்கமேகத்தின் குளிர்நீர் தெளிப்பதாகவும், இராமன் முடிசூடும் கோலம் காணாத மகளிர் என அசைவதாகவும் கற்பனை செய்யப்பெற்றன. தற்குறிப்பேற்றவணி, உவமையணி என முறையே காண்க. கோதை- கையுறை. விற்போர் செய்வார் கைகளுக்குத் தோலாற் செய்த உறை அணிவர். ‘ஏ’ காரம்ஈற்றசை. 30 | 2274. | வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்தென, அண்ணல் வெங்கதிரவன், அளவுஇல் மூர்த்தி ஆய், மண்ணிடை இழிந்து ஒரு வழிக்கொண்டாலென, எண்ண அரு மன்னவர் களிற்றின் ஏகினார். |
எண்ண அரு மன்னவர் - கணக்கிட முடியாத அரசர்கள்; அண்ணல் வெங் கதிரவன்- பெருமை பொருந்திய வெப்பமுள்ள ஒளிக்கதிர்களை உடைய சூரியன்; அளவு இல் மூர்த்திஆய் - அளவுபடாத பல வடிவங்களை எடுத்துக்கொண்டு; மீ வெண்மதி செல - தன்மேலே வெண்மதியானது சென்றுகொண்டிருக்க; மேகம் ஊர்ந்து - (தான்) மேகத்தின் மேல்ஊர்தியாக ஏறி; மண்ணிடை இழிந்து - பூமியில் இறங்கி; ஒரு வழிக் கொண்டால் என- ஒரேவழியில் பயணம் செய்தாற் போல; களிற்றின் ஏகினார் - (வெண்குடைநீழலில்) யானைமேல் சென்றார்கள். பலவடிவு கொண்ட சூரியன் பல மன்னர்களுக்கும், மேல் செல்லும் வெண்மதி மன்னர்மேல்நிழற்றிய வெண்குடைக்கும், மேகம் ஏற்றிச் செல்லும் யானைக்கும் உவமையாயின, சூரியன்மண்ணில் இறங்கல் இல்லையாதலின் இது அற்புதஉவமையணியாகும். 31 | 2275. | தேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக் கார்மிசைச் சென்றது ஓர் உவரி; கார்க்கடல், ஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும் பார்மிசைப் படர்ந்திது, பதாதிப் பௌவமே. |
ஓர் பரவை - (சேனை வீரர்களாகிய) ஒரு கடல்; தேர் மிசைச் சென்றது -தேர்மேல் சென்றது; ஓர் உவரி - (யானை வீரர்களாகிய) ஒரு சமுத்திரம்; செம்முகக் கார் மிசைக் சென்றது - சிவந்த (புள்ளிகளை உடைய) முகத்தை உடைய மேகம்(போன்ற யானை) மேல் சென்றது; கார்க்கடல் - கரிய (குதிரை வீரர்களாகிய) கடல்; ஏர்முகப் பரிமிசை ஏகிற்று - அழகிய முகத்தை உடைய குதிரைகளின் |