பக்கம் எண் :

570அயோத்தியா காண்டம்

அணி அலால் - அணிகலன்கள் அல்லாமல்; தகை மேவரு - அழகு
பொருந்திய(பொன்னாலும் மணியாலும் புனைந்த);  கலன்களை -
அணிகளை;  வெறுத்த மேனியர் -வேண்டாம் என்று நீக்கிய உடம்போடு;
பூ உதிர் கொம்பு என - பூக்களை உதிர்த்துவிட்டபூங்கொம்பு  போல;
போயினார் - (அக்கூடத்தில்) சென்றார்கள்.

     அரசர்க்கு வந்த துன்பம் தமக்கென நினையும் மக்கள் ஆதலின் அணி
அணியாமல் சென்றனர்என்க. “நவை அறு குணங்கள் என்னும் பூண்” எனப்
பின்னும் (7653) அணிகலன் என்பார் குணங்களை. “ஏண்பால் ஓவா நாண்
மடம் அச்சம் இவையே தம்,  பூண் பாலாகக் காண்பவர் நல்லோர்” (1533)
என முன்னும் கூறியது காண்க. “பூ உதிர் கொம்பு ‘உவமையணி. அணிகலன்
நீத்த கைகேயியை, ”பூஉதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவிமிசைப்
புரண்டாள்” (1493.) என்றார்முன்னும்.                             34

2278.அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனிக்குடை மீது இலாப் படை
பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே.

     அதிர் கடல் - ஒலிக்கின்ற கடலாற் சூழப்பெற்ற;  வையகம்
அனைத்தும் -
உலகம் முழுவதையும்;  காத்தவன் - (நீதி வழுவாது)
காப்பாற்றிய தயரதசக்கரவர்த்தியின்;  விதிவரு - மரபுவழியில்
பாரம்பரியமாக வருகின்ற;  தனிக்குடை- ஒப்பற்ற வெண்கொற்றக்குடை;
மீது  இலா - மேலே பிடிக்கப்படாது  உள்ள;  படை- அச்சேனை;
பொதி பல கவிகை மீன் - நெருங்கிய பலவாகிய (மற்றை மன்னர்களின்)
வெண்குடைகளாகிய விண்மீன்கள்;  பூத்தது  ஆகிலும் - வானம் எங்கும்
நிரம்பித்தோன்றின ஆயினும்;  கதிர் மதி - ஒளியுடைய சந்திரன்;
நீங்கிய கங்குல் - இல்லாத இரவை;  போன்றது -.

     மன்னர்கள் குடைக்குத் தாரகைகளும், சக்கரவர்த்தியின் வெண்கொற்றக்
குடைக்குச்சந்திரனும் உவமையாம். விண்மீன்கள் பூத்திருப்பினும் சந்திரன்
இல்லாத ஆகாயம்பொலிவழிந்திருத்தல் போல, வெண்குடைகள் பல
நடுவே தோன்றினும், சக்கரவர்த்தியின்வெண்கொற்றக் குடை இல்லாமையால்
சேனை பொலிவழிந்து தோன்றிய தென்க.  விதி - முறைமை.இங்கே மரபு
வழியில் சூரிய குலத்தார்க்கு உரியதாய் வருவது. ‘கவிகை மீன்’
உருவகம். ‘ஏ’காரம்ஈற்றசை.                                     35

2279.செல்லிய செலவினால், ‘சிறிய திக்கு’ எனச்
சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில்,
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை, ‘ஓர்
மெல்லியல்’ என்றவர் மெலியரேகொலாம்.?

     செல்லிய செலவினால் - பரந்து செல்கின்ற செல்கையால்;