பக்கம் எண் :

ஆறு செல் படலம் 571

‘திக்கு சிறிய’- திசைகள் இடம் போதாமல் சிறியன;  எனச் சொல்லிய
சேனையை
- என்று பிறரைச்சொல்லச்செய்கின்ற (பேரளவுள்ள) இந்தச்
சேனையை; சுமந்தது  எனில் - (இந்தப் பூமி)சுமந்து கொண்டுள்ளது
என்றால்; ஒல் ஒலி வேலை நீர் உடுத்த பாரை - ஒல்லென்றுஒலிக்கின்ற
கடல் நீரை ஆடையாகச் சுற்றி உடுத்துக் கொண்டுள்ள பூமியை; மெல்லியல்-
மென்மைத் தன்மை உடைய பெண் என்று சொன்னவர்கள்;  மெலியர்
கொல்
- மெலியர்போலும்.

     ‘பூதேவி - நிலமகள்’  என்று  சொல்லும் வழக்குப் பற்றியது. “நிலம்
என்னும் நல்லாள்”என்றார் (குறள்.1040.) வள்ளுவரும். மெல்லியல்
பெருஞ்சுமையைத் தாங்க மாட்டாள் ஆதலின்,பூமியை மெல்லியல் என்றல்
பொருந்தாது என்று சமத்காரமாகக் கூறிச் சேனையின் மிகுதியைப்
புலப்படுத்தினார். ‘ஏ’ காரங்கள் அசை. ‘கொல்’ ஐயப்பொருட்டு.         36

2280.தங்கு செஞ் சாந்து அகில் கலவை சார்கில,
குங்குமம் கொட்டில, கோவை முத்து இல, -
பொங்கு இளங் கொங்கைகள் - புதுமை வேறு இல
தெங்கு இளநீர் எனத் தெரிந்த காட்சிய.

     பொங்கு இளங் கொங்கைகள் - (மகளிரது) பருத்துக் கொண்டுள்ள
இளமையானதனங்கள்;  தங்கு செஞ்சாந்து  அகில் கலவை சார்கில -
(தம்மிடம் பூசப்பெற்று எப்பொழுதும்) தங்கியிருக்கப்பெற்ற செஞ்சந்தனம்,
அகில் குழம்பு,  கலவைச் சாந்து இவை(இப்போது) சாரப் பெறாமல்;
குங்குமம் கொட்டில - குங்குமக் குழம்பு பூசப்பெறாமல்; கோவை முத்து
இல -
முத்துவடம் அணியாமல்; வேறு புதுமை  இல - வேறு புதிய
செயற்கை நலன்கள் இல்லாமல் (இருப்பதால்);  தெங்கு - தென்னையின்;
இளநீர்எனத் தெரிந்த காட்சிய - இளநீர்க் காய்கள் போலத் தோற்றம்
உடையவாயின.

     சாந்து  முதலியன அணியாமல் இருக்கிறபடியால், இளநீர்க் காய்களின்
தோற்றம் அவ்வாறேபொருந்தியுள்ளது என்று கற்பனை செய்தார்.     37

2281.இன் துணையவர் முலை எழுது சாந்தினும்
மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால்
துன்று இளங் கொடி முதல் தூறு நீங்கிய
குன்று எனப் பொலிந்தன - குலவுத் தோள்களே.

     குலவுத் தோள்கள் - (ஆண்களின்) திரண்ட தோள்கள்;  இன்
துணைவர்
-(அவர்களுடைய) இனிய மனைவியரது;  முலை எழுது
சாந்தினும் -
முலை மேல் தொய்யில்எழுதப்பெற்ற சாந்தினால்;  மன்றல்
அம் தாரினும் -
(தாமே அணியும்) மணம் வீசும்மாலையால்;
மறைந்திலாமையால் - இப்பொழுது  மறையாமல் (இயற்கையாக