பக்கம் எண் :

572அயோத்தியா காண்டம்

உள்ளபடி) விளங்கித் தோன்றுதலால்; துன்று இளங்கொடி முதல் -
நெருங்கிய இளைய கொடிமுதலாகிய;  தூறு நீங்கிய - புதர்கள் இல்லாமற்
போன;  குன்று என - மலைபோல;பொலிந்தன - தோன்றின.

     மகளிர் கோலம் செய்யாமை போல ஆடவரும் உள்ளனர் என்பதாம்.
இன்துணையவர் என்றது காதலியராகிய மனைவியரை. ‘ஏ’ ஈற்றசை.      38

2282.நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின்
துறை அற, அஞ்சனம் துறந்த நாட்டங்கள்
குறை அற நிகர்த்தன - கொற்றம் முற்றுவான்.
கறை அறக் கழுவிய கால வேலையே.

     நறை அறு கோதையர் - வாசனைப் புகை  ஊட்டாத கூந்தலை
உடைய மகளிர்;  நாள்செய் கோலத்தின் துறை அற - நாள்தோறும்
செய்யப்படுகின்ற அலங்காரத்தின் தன்மைகள்நீங்கினமையால்;  அஞ்சனம்
துறந்த -
மை தீட்டப் பெறாத (இயற்கையான தோற்றத்தோடுஉள்ள)
கண்கள்; கொற்றம் முற்றுவான் - (போர்செய்து) வெற்றியை முடித்த
ஒருவன்;  கறை அறக் கழுவிய - போர்காலத்துப் படித்த போன்ற
வேற்படையை;  குறை அற நிகர்ந்தன- குறைவில்லாமல் ஒத்திருக்கின்ற
ஆயின.

     மை எழுதாத கண்கள் இரத்தக்கறை கழுவிய வேலைப் போன்றன. ‘ஏ’
காரம்ஈற்றசை.                                                39

2283.விரி மணி மேகலை விரவி ஆர்க்கில
தெரிவையர் அல்குல், தார் ஒலி இல்தேர் என
பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி,
அரிஇனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே.

     தெரிவையர் அல்குல் - மகளிரது  இடைப்பகுதி;  தார் ஒலி இல்
தேர் என -
மணி ஒலி இல்லாத (அலங்கரிக்கப்பெறாத) தேர் போல; மணி
விரி மேகலை விரவி ஆர்க்கில-
மணிகள் பதிக்கப் பெற்ற மேகலை
அணியப்பெற்றிலாமல் ஒலி யற்றவையாய் இருந்தன; பவளச் சீறடி -
பவளம் போன்ற சிவந்த நிறம் வாய்ந்த சிறிய அடி; அரி இனம்
ஆர்க்கிலாக் கமலம் என்ன -
வண்டுக் கூட்டங்கள் ஒலிக்காத தாமரை
மலர் போல; பரிபுரம் ஆர்க்கில - சிலம்புகள் ஒலிக்கப்பெறாமல், உள்ளன.

     இரண்டும் உவமையணி. ‘ஏ’ காரம்  ஈற்றசை.                   40