பக்கம் எண் :

574அயோத்தியா காண்டம்

     தொழில் செய்தல் மகிழ்ச்சியாம்; தொழில் செய்யாமல் சும்மா இருத்தல்
துன்பமாம்;மன்மதன் தனக்கு வேலையின்மை கருதித் துயர்க்கடலில்
மூழ்கினான் ஆம். ‘ஏ’ காரம்ஈற்றசை.                              42

2286.மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும்
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்?
கண்ணினும் மனத்தினும் , கமலத்து அண்ணல்தன்
எண்ணினும், நெடிது - அவண் எழுந்த சேனையே.

     அவண் எழுந்த சேனை - அயோத்தியில் (அப்போது) புறப்பட்ட
சேனை; மண்ணையும், வானையும்,  வயங்கு திக்கையும் - பூமி,
ஆகாயம்,  திசைகள் ஆகியவற்றையெல்லாம் ஒருசேர; உண்ணிய நிமிர்
கடல்
- உண்ணுதற்கு எழுந்த யுகாந்த காலக் கடலை; ஒக்கும் என்பது
என் -
ஒத்திருக்கும் என்று சொல்வது நிரம்பாதாகும்; கமலத்து அண்ணல்
தன் -
(படைப்புக் கடவுளாகிய) பிரமதேவனது; கண்ணினும், மனத்தினும்,
எண்ணினும் நெடிது -
(படைத்த பொருளைக் காணும்) கண்ணையும்,
நினைக்கும்) மனத்தையும்,(நினைக்கின்ற) நினைப்பையும் கடந்து
நீண்டதாகும்.

     ‘உண்ணிய’ ‘செய்யிய’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்;  ‘நிமிர்’
என்னும்வினைகொண்டு முடிந்தது.  ‘ஏ’ காரம் ஈற்றசை.               43

2287.அலை நெடும் புனல் அறக் குடித்தலால், அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால், நெடு
மலையினை மண் உற அழுத்தலால், தமிழ்த்
தலைவனை நிகர்த்தது - அத் தயங்கு தானையே.1

     அத் தயங்கு தானை - விளங்குகின்ற அந்தச் சேனை;  அலை
நெடும் புனல் அறக்குடித்தலால் -
கடந் நீரை முற்றும் வற்றக்
குடித்தலாலும்; அகம் நிலைபெற நிலைநெறிநிறுத்தலால் - பூமி இடம்
(ஒரு புறம் சாயாது) நிலைபெறும்படி நிலையான முறையில் நிற்கச்
செய்வதாலும்; நெடு மலையினை மண் உற அழுத்தலால் -
பெருமலைகளை மண்ணிற் புகும்படிஅழுத்திவிடுதலாலும்; தமிழ்த்
தலைவனை -
தமிழன் தலைவனாகிய அகத்திய முனிவனை; நிகர்ந்தது -
ஒத்துள்ளது.

     கடலைக் குடித்தல், பூமியை ஒருபாற் சாயாது  நிறுத்தல், மலையை
அழத்தல் மூன்றும்அகத்தியன் செய்த செயல்கள், சேனைகள் கடலைக்
குடிக்கின்றன. பூமி எங்கும் இடமின்றிப்பரந்துள்ளபடியால் ஒருபால் சாயாது
நிறுத்துகின்றன. மலைகள் மேலேறிச் செல்லும்போது சேனைப்பாரம்
தாங்காமல் மலைகள் உள்ளே அழுந்துகின்றன; ஆதலால் மலைகளை
அழுத்துகின்றன; எனவே, தமிழ்த் தலைவனை நிகர்த்தது சேனை என்றார்.
அகத்தியன் தமிழ்த்