பரந்துள்ள அச் சேனைக்கடலில்; வாள் உலாம் நுதலியர் - ஒளி பரந்த நெற்றியுடையமகளிரது; மருங்குல் அல்லது - (மின்னல் போன்ற) இடையே அல்லாமல்; (வேறாகிய) தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி - தோளின்கண் தவழ்கின்ற காதணியாகிய குண்டலம்முதலாகிய பழமையாக அணியும் அணிகளின்; கேழ் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லை - நிறம் விளங்குகின்ற மின்னல் ஒளி மிக்கு ஒளிர்வது இல்லை. பெண்கள் இடைமின்னல் ஒளி அன்றி, வேறு அணிகளின் மின்னொளி இல்லை என்றபடி. கேழ் -நிறம்; எதுகை நோக்கிக் கேள் என நின்றது. ‘கெழு’ என்னும் உரிச்சொல் ‘கேழ்’ எனநின்றது. “குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே” (தொல். - சொல். உரி. 5) என்பது காண்க.அக்கடல் என்றது சேனையை; உருவகம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 48 | 2292. | மத்தளம் முதலிய வயங்கு பல் இயம் ஒத்தன சேறலின், உரை இலாமையின், சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய பத்தியை நிகர்த்தது - அப் படையின் ஈட்டமே. |
அப் படையின் ஈட்டம் -அந்தச் சேனைத் தொகுதி; மத்தளம் முதலிய வயங்கு பல்இயம் - மத்தளம் முதலாகிய விளங்குகின்ற பல வாத்தியங்கள்; உரை இலாமையின் ஒத்தனசேறலின் - ஒலிக்காமல் பொருந்திச் செல்கின்ற படியால் (ஒலியவிந்த படைச்செலவு); நெடுஞ் சுவர்- நீண்ட சுவரில்; சித்திரம் தீட்டிய - சித்திரமாக வரைந்த; சேனைப் பத்தியை நிகர்த்தது - சேனை வரிசையை ஒத்துள்ளது. சேனை வரிசைப் படம் ஒன்று சுவரில் தீட்டப்பெற்றாற்போல ஒலியவிந்த படைவரிசை செல்வதுஉள்ளது என்றார். ஒலிக்காமல் இசைக்கருவிகளைச் சேனை சுமந்து செல்வானேன் என்னில், இராமனை அழைத்து வரும்போது இசைத்தற்கு வேண்டுதலின் இப்போது உடன் கொண்டு சென்றார்என்க. 49 | 2293. | ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல் ஊடு உற உரம் தொளைத்து, உயிர் உணாவகை. ஆடவர்க்கு அரும் பெருங் கவசம் ஆயது - காடு உறை வாழ்க்கையைக் கண்ணன் நண்ணவே. |
கண்ணன் - கண்ணாற் செய்யப்படும் அருளிற் சிறந்தவனாகிய இராமன்; காடு உறவாழ்க்கையை நண்ண - காட்டின்கண் வசிக்கும் வாழ்க்கையை மேற்கொள்ள, (அச்செயல்); ஆடவர்க்கு - ஆண்களுக்கு எல்லாம்; ஏடு அறு கோதையர் - புறவிதழ் நீக்கிய மலர் கொண்டு தொடுத்த மாலை அணிந்த மகிளிர்; விழியின் எய்த கோல் - கண்ணிலிருந்து எய்த காதற் பார்வை அம்பானது; உரம் ஊடு உறத் தொளைத்து |