பக்கம் எண் :

578அயோத்தியா காண்டம்

உயிர் உணா வகை- மார்பினை ஊடுருவிச் சென்று அவர்கள் உயிரைப்
போக்காதபடி; அரும்பெரும் கவசம் ஆயது
- அரிய பெரிய கவசம்
அணிதல் போன்றதாய்ப் பாதுகாப்பானது.

     இராமன் வனம் போய துயரால், பெண்டிரும் காதற் பார்வை
இழந்தனர், ஆடவரும்அப்பார்வையால் துன்புறுதல் இலர் என்று
இருவர்க்குமே  இதனைக் கொள்க. ‘ஏ’ காரம்ஈற்றசை.                50

2294.கனங் குழைக் கேகயன் மகளின் கண்ணிய
சினம் கிடந்து எரிதலின், தீர்ந்தவே கொலாம் -
அனங்கன் ஐங் கொடுங் கணை அடரும் ஆடவர்
மனம் கிடந்து உண்கில, மகளில் கொங்கையே?

     அனங்கன் ஐங்கொடுங்கணை அடரும் ஆடவர் மனம் - மன்
மதனது (பிறரை வருத்தும்)ஐந்து  கொடிய கணையால் நெருக்கப்படும்
ஆண்களது  மணம்;  மகளிர் கொங்கை - பெண்களது முலைகளில்;
கிடந்து உண்கில - இருந்து தங்கி அநுபவியாமல் போயின; கனம் குழை
கேகய மகளின் கண்ணிய சினம் -
கனமான காதணி அணிந்த
கைகேயியின்மேல் (மகளிர்) கருதியசினம்;  கிடந்து - பெண்கள் இடத்தே
தங்கி;  எரிதலின் - எரிகின்றகாரணத்தால்;  தீர்ந்தவே கொல் -
(கொங்கைகள் கடும் என்று கருதித்)தவிர்ந்தனவோ?

     கைகேயி ஒருத்தியால் எல்லா மகளிரையும் தயரதன் வெறுத்தான்
என்பதனை முன்னர்க் (1516) கூறினார்.  கைகேயிமேல் உண்டாகிய நெருப்பு
அனைத்து மகளிரிடத்திலும் தங்கியிருப்பதாகக் கருதி ஐங்கணை அடரவும்
ஆடவர் கொங்கையை அநுபவியாது விட்டனர். ஐங்கணை - மலர் அம்பு
ஐந்து,  தாமரை,  முல்லை,  மா,  அசோகு, நீலோற்பலம்ஆகிய  ஐந்து
மலர்களும் மன்மதன் அம்புகளாகும். “கொல்” ஐயம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 51

பரதன் மரவுரி அணிந்து சத்துருக்கனனுடன் தேரில் சேறல்  

2295.இன்னணம் நெடும் படை ஏக, ஏந்தலும்,
தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்;
பின் இளையவனொடும், பிறந்த துன்பொடும்,
நல் நெடுந் தேர்மிசை நடத்தல் மேயினான்.

     இன்னணம் - இவ்வாறு; நெடும்படை ஏக - பெருஞ்சேனை செல்ல;
ஏந்தலும் - பரதனும்; தன்னுடைத் திரு அரை - தன்னுடைய அழகிய
இடுப்பிலே;  சீரைசாத்தினான் - மரவுரியைத் தரித்து; பின்
இளையவனொடும் -
பின்னே தொடர்ந்துவரும் தம்பியாய
சத்துருக்கனனொடும்; பிறந்த துன்பொடும் - (மனத்துள்) தோன்றியதுக்கத்
தோடும்; நல்நெடுந் தேர்மிசை - நல்ல பெரிய தேர்மீது ஏறி; நடத்தல்
மேயினான் -
(வனத்துக்குச்) செல்லத் தொடங்கினான்.