பட்ட முறைமையில் ஆன வழிபாட்டை; நன்று இழைத்து - நன்றாகச்     செய்து;  அவண் -அவ்விடத்தில்;  நல்ல தவர்க்கு எலாம் - நல்ல     தவத்தோர்களுக்கெல்லாம்;  கன்றுடைப்பசுவின் கடல் - கன்றோடு கூடிய     பசுவின் கூட்டங்களை; நல்கினாள் - தானமாகக் கொடுத்தாள். ஸ்ரீ நாராயணனை வழிபட்டு, வழிபாட்டின் முடிவில் கோதானம்     செய்தாள்.                                                    9 | 1408. | ‘பொருந்து     நாள் நாளை, நின் புதல்வற்கு’ என்றனர்,     திருந்தினார்; அன்ன சொல் கேட்ட செய் கழல்     பெருந் திண் மால் யானையான், ‘பிழைப்பு இல் செய்                                             தவம்     வருந்தினான் வருக’ என, வசிட்டன் எய்தினான். |  
      திருந்தினார் - (நூல்களில்) தேறியவர்களாகிய கணித நூல்     அறிஞர்கள்; ‘நின்புதல்வற்கு - உன் மகனுக்கு, (முடி சூட்டுவதற்கு);     பொருந்தும் - பொருத்தமான;  நாள்- நல்ல நாள்;  நாளை -     நாளைக்கேயாகும்;’ என்றனர் - என்று சொன்னார்கள்; அன்ன சொல்     கேட்ட - அந்த வார்த்தையைக் கேட்ட;  செய்கழல் - புனைந்த வீரக்கழலணிந்த;  பெருந்திண்மால் யானையான் - பெரிய வலிய     மதமயக்கமுடைய யானையையுடையதயரதன்; ‘பிழைப்பு இல் செய்தவம் -     தவறில்லாத தவத்தைச் செய்து;  வருந்தினான்- வருத்திய மேனி உடைய     வசிட்டன்;  வருக என - வருக’ என்று அழைக்க; வசிட்டன்- வசிட்ட     முனிவன்;  எய்தினான் - வந்து சேர்ந்தான்.          திருந்தினார் என்றது கற்றறிவில் முற்றத்துறைபோய் அதன் பயனாய்     வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டவர்கள். கடுமையான தவம் செய்தவன்     என்பது தோன்ற ‘செய்தவம் வருந்தினான்’ என்று கூறினார்.            10 இராமனுக்கு உறுதி கூறும்படி தயரதன் வசிட்டனை வேண்டுதல் | 1409. | ‘நல்     இயல் மங்கல நாளும் நாளை; அவ்     வில் இயல் தோளவற்கு ஈண்டு, ‘வேண்டுவ     ஒல்லையின் இயற்றி, நல் உறுதி வாய்மையும்     சொல்லுதி பெரிது’ என, தொழுது சொல்லினான். |  
      (தயரதன் வசிட்டனைப் பார்த்து) ‘நல் இயல் மங்கல நாளும்     நாளை - நல்ல இயல்புகளையுடைய( கோள் நிலை உடைய ) முகூர்த்த     நாளும் நாளைக்கேயாகும்;  (ஆதலால்) அவ் வில் இயல் தோளவற்கு-     அந்த வில்பழகிய தோள் உடையவனாகிய இராமனுக்கு;  ஈண்டு -      இவ்விடத்தில்;  வேண்டுவ- வேண்டியனவாய விரதம் முதலிய சடங்கு  |