2305. | அடிமிசைத் தூளி புக்கு, அடைந்த தேவர்தம் முடி உறப் பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம்; நெடிது உயிர்த்து உண்டவும், நீந்தி நின்றவும் பொடிமிசைப் புரண்டவும், புரவி ஈட்டமே. |
அடிமிசைத் தூளி புக்கு - (குதிரைகளின்) அடியின் மேல் எழுந்த தூசி(அமரருலகத்தில்) புகுந்து; அடைந்த தேவர்தம் - அங்கே உள்ள தேவர்களது; முடி உற- தலைமீது படும்படி; பரந்தது - (தேவருலகு முழுமையும்) பரவியது (ஆகிய); ஓர் முறைமைதேர்ந்திலெம் - ஒரு தன்மையை (அனுமானிக்க முடிகிறதன்றி) மனிதராகிய (எம்மால்) ஆராய்ந்தறிய இயலவில்லை; நெடிது உயிர்த்து உண்டவும் - பெருமூச்சு விட்டு (நீரைப்)பருகியவையும்; நீந்தி நின்றவும் - (நீரில்) நீந்திக்கொண்டு இருந்தவையும்; பொடிமிசைப் புரண்டவும் - மண்ணில் விழுந்து புரண்டவையும்; (எல்லாம்) புரவி ஈட்டமே- குதிரைத் தொகுதிகளே. (வேறில்லை) புழுதி, மேல் படர்ந்து சென்று வானுலகத்தில் தேவர்களை முழுக்காட்டிய செய்தி நாம்அறியோம். ஆயினும், இங்கே நீரிலும் நிலத்திலும் நின்றவை யெல்லாம் குதிரைகளே என்றதுகுதிரைப் படையின் மிகுதி கூறியவாறு. ‘ஏ’ காரம் ஈற்றசை. 3 2306. | பாலை ஏய் நிறத்தொடு, பண்டு தான் படர் ஓலை ஏய் நெடுங் கடல், ஓடிற்று இல்லையால்;- மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம் வேலையை மடுத்தது, அக் கங்கை வெள்ளமே. |
அக் கங்கை வெள்ளம் - அந்தக் கங்கையாற்றின் நீர்ப் பெருக்கு; பாலை ஏய்நிறத்தொடு - பால் ஒத்த வெண்மை நிறத்துடன்; தான் பண்டு படர் - தான் முன்புசென்று சேர்கின்ற; ஓலை ஏய் நெடுங்கடல்- ஆரவாரம் பொருந்திய நீண்ட கடலின்கண்; ஓடிற்று இல்லை - சென்று கலந்தது இல்லை; (ஏன் எனில்) மாலை ஏய் நெடுமுடி -பூமாலை பொருந்திய நீண்ட மகுடத்தை உடைய; மன்னன் சேனை ஆம் வேலையே - பரதனது சேனையாகிய கடலே; மடுத்தது - உண்டு விட்டது. பரதனது சேனைக்கடல் வழிவந்த இளைப்பினால் கங்கை நீரைப் பருகிய படியால் கங்கையில் நீரே இல்லையாகிவிட்டது; எனவே, கடலில் கங்கை கலக்கவில்லை எனஉயர்வு நவிற்சியாகக் கூறிச் சேனை மிகுதியைக் காட்டினார். ‘ஓல்’-ஒலி மிகுதி. “பாலை ஏய்நிறத்தொடு....ஓடிற்றில்லை” என உரைத்து மதநீர்ப் பெருக்கு்க் கலந்தலாலும், சேனை மிகுதிஉழக்கலாலும் கங்கையின் கங்கையின் வெண்ணிறம் மாறிக் கடலில் கலந்தது என்பாருளர். பின்னர்ச் சேனையாம் வேலையே மடுத்தது என வருதலின் அது ஒவ்வாமை அறிக. கடலினும் சேனைமிகுதி |