வந்து எய்தினான் - நால்வராக எண்ணப்படுகின்ற வசிட்ட முனிவன்வந்து சேர்ந்தான். தயரதன் ஆட்சியில் அவனுக்கு ஆணையிடும் ஆற்றல் உடையவன் வசிட்டன் என்றுவசிட்டனின் ஏற்றம் கூறப்பட்டது. அவன் அமைச்சருள் முதல்வனும், புரோகிதனும், குலகுருவும் பிரமஇருடியுமாகத் திகழ்தலின் அவன் வரவு தனியே பிரித்துரைக்கப்பட்டது. பொலன் கழல்-பொன்கழல். 4 அமைச்சர் மாண்பு 1318. | குலம் முதல் தொன்மையும், கலையின் குப்பையும், பல முதல் கேள்வியும், பயனும், எய்தினார் ; நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார் ; சலம் முதல் அறுத்து, அருந் தருமம் தாங்கினார். |
குலம் முதல் தொன்மையும் - குடிப்பிறப்பினது முதன்மையான பழமையும் ; கலையின் குப்பையும் - கலை அறிவுகளின் தொகுதியையும்; பல முதல் கேள்வியும்- பல சிறந்த கேள்வியறிவையும் ; பயனும் - அவற்றால் உளதாகும் பயனையும் ; எய்தினார் - பெற்றவர்கள் ; நலம் முதல் நலியினும் - தமக்கு வரும்நலன்கள் வேரோடு கெடுவதாயினும் ; நடுவு நோக்குவார் - நடுவு நிலைமையையேகாப்பவர்கள் ; சலம் முதல் அறுத்து - சினத்திற்கு மூலகாரணமான அகந்தையைக்கிழங்கோடு களைந்து; அருந்தருமம் தாங்கினார் - அரிய அறங்களைப் போற்றுபவர்கள். அமைச்சர்கள் குடிப்பிறப்பு, கல்பி, கேள்விச் சிறப்பு, நடுவு நிலைமை, சினமின்மை ஆகிய பண்புகளோடு திகழ்ந்தனர் என்பது கூறப்பட்டது. குப்பை - தொகுதி, மிகுதி.தாங்குதல் - போற்றிக் காத்தல். சலம் - கோபம்; வஞ்சனையும் ஆம். முதல் -முதன்மை, சிறப்பு, வேர் என்னும் பல்வேறு பொருளில் வந்தது. 5 அறுசீர் ஆசிரிய விருத்தம் 1319. | உற்றது கொண்டு, மேலவந்து உறுபொருள் உணரும் கோளார் ; மற்றுஅது வினையின் வந்தது ஆயினும், மாற்றல் ஆற்றும் பெற்றியர் ; பிறப்பின் மேன்மைப் பெரியவர் ; அரிய நூலும் கற்றவர் ; மானம் நோக்கின், கவரிமா அனைய நீரார். |
|