| | ‘எவ் வழி உறைந்தான் நம்முன்?’ என்றலும், எயினர் வேந்தன், ‘இவ் வழி , வீர! யானே காட்டுவல்; எழுக!’ என்றான். |
அருள் தரு வாரி அன்ன - கருணைப் பெருங்கடலை ஒத்த; செவ்வழி உள்ளத்து அண்ணல் - நேரிய வழியிற் செல்லும்மனத்தை உடைய பரதன்; அவ் வழி - அப்போது; அவனை நோக்கி - குகனைப் பார்த்து; தென்திசைச் செங்கை கூப்பி - இராமன் சென்றுள்ள தென்திசையைப் பார்த்துத்தன் சிவந்த கைகளைக் குவித்து வணங்கி; ‘நம்முன் - நம்முடைய அண்ணன்; எவ்வழிஉறைந்தான்?’ - எந்த இடத்தில் தங்கியிருந்தான்?; என்றலும் - என்றுகேட்டவுடனே; எயினர் வேந்தன் - வேட அரசனாகிய குகன்; ‘வீர! - வீரனே!; இவ் வழி - இவ்விடத்தில்; யானே காட்டுவல் - நானே (அவ்விடத்தை உனக்குக்) காண்பிப்பேன்; எழுக’ - என்னுடன் புறப்படுவாயாக; என்றான் -. ‘தென் திசைச் செங்கை கூப்பி’ - ‘திசை நோக்கித் தொழுகின்றான்’ (2332.) எனமுன்னர் வந்ததும் காண்க. ‘இவ்வழி’ என்பதற்கு ‘இந்த இடமாகும்’ என்று குகன் அவ்விடத்தையும்காட்டிச் சுட்டிச் சொல்லியதாக முடித்துக் காட்டலும் ஒன்று. 38 இராமன் வைகிய இடம் கண்ட பரதன் நிலையும் நினைவும் | 2341. | கார் எனக் கடிது சென்றான்; கல்லிடைப் படுத்த புல்லின், வார் சிலைத் தடக் கை வள்ளல், வைகிய பள்ளி கண்டான்; பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்; பருவரற் பரவை புக்கான்- வார் மணிப் புனலால் மண்ணை மண்ணுநீர் ஆட்டும் கண்ணான். |
(குகன் காட்டிய இடத்துக்குப் பரதன்) கார் எனக் கடிது சென்றான் - மேகம் போலவிரைவாகச் சென்று; வார் சிலைத் தடக்கை வள்ளல் - கட்டமைந்த வில்லேந்திய நீண்டகைகளை உடைய இராமன்; வைகிய - தங்கியிருந்த; கல்லிடைப் படுத்த புல்லின் பள்ளி -கற்களின் இடையே பரப்பப்பெற்ற புல்லால் ஆகிய படுக்கையை; கண்டான் - பார்த்து; பார்மிசை - பூமியின் மேல்; பதைத்து - துடித்து; வீழ்ந்தான் - விழுந்து; பருவரல் பரவை புக்கான் - துன்பம் எனும் கடலில் புகுந்து; வார் மணிப் புனலால்- பெருகுகின்ற முத்துமணி போன்ற கண்ணீரினால்; |