பக்கம் எண் :

618அயோத்தியா காண்டம்

     இவ் இடை என்பது காலம் இடமாயிற்று. இராமன் வைகிய இடம்
கண்ட பரதன் அந்த இடத்திலேயே புழுதி மண்ணில் தங்கினானாம். கங்கை
ஆற்றைத் தாண்டித் தென்கரை விடுதல் - துன்பக் கடலைத் தாண்டி
இராமனிடம் சேர்பித்ததாகும் என்றானாம் இராமனை வேந்தன், மன்னன்
என்றே குறித்துச் செல்லும் பரதனது உளப்பாங்கை இங்கு அறிக. ஆற்றின்
ஏற்றுதல் என்பது ஆற்றிலிருந்து கரை யேற்றுதல் என்பதனைக்
குறித்தவாறாம்.                                                44

குகன் கட்டளையிட, நாவாய்கள் வருதல்  

2347. ‘நன்று’ எனப் புளிஞர் வேந்தன்
     நண்ணினன் தமரை; ‘நாவாய்
சென்று இனித் தருதிர்’ என்ன, வந்தன-
     சிவன் சேர் வெள்ளிக்
குன்று என, குனிக்கும் அம் பொன் குவடு என,
     குபேரன் மானம்
ஒன்று என, நாணிப் பல் வேறு
     உருவு கொண்டனைய ஆன,

     (பரதன் கூறியது  கேட்டு) புளிஞர் வேந்தன் - வேடர் வேந்தனாய
குகன்; ‘நன்று’- நல்லது (அவ்வாறே செய்வேன்) என்று சொல்லி; தமரை
நண்ணினன்
- தன் இனத்தவரைஅடைந்து; ‘சென்று இனி நாவாய்
தருதிர்’ என்ன
- (நீங்கள்) சென்று  இனிமேல்படகுகளைக் கொண்டு
வருக என்று சொல்லிவிட; (நாவாய்கள்) சிவன் சேர் வெள்ளிக் குன்று
என
- சிவபெருமான் வீற்றிருந்து அருளும் (திருக்கயிலாயம் எனப்பெறும்)
வெள்ளிமலை போல; குனிக்கும் அம்பொன் குவடு என -
(அச்சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில்) வளைத்த(மகா மேரு
மலையாகிய) பொன்மலை போல;  குபேரன் மானம் என - (வடதிசைக்கு
அதிபனாகிய) குபேரனது  புஷ்பக விமானம் போல; ஒன்று என நாணி -
(இவையெல்லாம்) தாம்ஒன்றாய் இருப்பதற்கு வெட்கமுற்று; பல்வேறு
உருவு கொண்டனைய ஆன
- அவை தாமேஒவ்வொன்றும் பல்வேறு
வடிவங்களை எடுத்துக் கொண்டாற்போன்றவையாகிய நாவாய்கள்; வந்தன-
(கங்கையின் கண்) வந்து சேர்ந்தன.

     பல்வேறு வடிவும் நிறமும் பருமையும் உடைய படகுகளை
வெள்ளிமலை, பொன்மலை, புஷ்பக விமானம் பல்வேறு வடிவுகொண்டு
வந்துள்ளதாகக் கற்பனை செய்தார்; இது தற்குறிப்பேற்றம் உவமையணியுடன்
வந்தது. ‘குபேரன் மானம் என’ என்று ‘என’ வைப் பிரித்துக் கூட்டுக.    45

நாவாய்களின் தோற்றப் பொலிவு  

2348. நங்கையர் நடையின் அன்னம்
     நாண் உறு செலவின் நாவாய்.