தேவர்களில் அந்தணர் சீற்றத்தால் நொந்தோர் பலர்; அந்தணர் கருணையால் மேம்பட்டோர் பலர். எனவே தேவரினும் பெரியர் அந்தணர். ‘நிறைமொழி மாந்தர் பெருமை’ என்னும் குறள்(குறள்.28.) உரையில்; ‘நிறைமொழி - அருளிக்கூறினும், வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி’ என்று பரிமேலழகர் எழுதிய உரையை இங்குக் கருதுக. நொந்துளார். அகத்தியர்சபித்தலால் இந்திர பதவி பெற்ற நகுடன் பாம்பாயினமை காண்க. மேம்பட்டார் - கௌசிக அரசன்,பிரம முனிவனாகி விசுவாமித்திரனாய்ப் புகழ்பெற்றமை வசிட்டன் அருளால் ஆயினமை காண்க. ஆங்கு, ஆம், கொல் என்பன அசைகள். 16 1415. | அனையர் ஆதலின், ஐய! இவ் வெய்ய தீ - வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை புனையும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி; இனிய கூறி நின்று ஏயின செய்தியால். |
‘ஐய! - இராமனே; அனையர் ஆதலின் - (அந்தணர்) அத்தன்மையர் ஆகையால்; வெய்ய தீவினையின்நீங்கிய - கொடிய தீவினையிலிருந்து விலகிய; இம் மேலவர் - இந்த அந்தணரின்; தாள் இணை - திருவடி இணைகளை; புனையும் சென்னியையாய் - முடிமேல் சூடிக்கொண்டு; புகழ்ந்து ஏத்துதி - புகழ்ந்து துதித்து; இனிய கூறி - இன்மொழிகளைக் கூறிஅவர்களை உபசரித்து; ஏயின - அவர்கள் ஏவிய பணிகளை; நின்று - இருந்து; செய்தி - செய்வாயாக. அந்தணரிடம் நடந்துகொள்ளவேண்டிய முறைகளை இங்குக் கூறினார் வசிட்டர் என்க. ‘ஆல்’அசை. 17 1416. | ‘ஆவதற்கும், அழிவதற்கும், அவர் ஏவ, நிற்கும் விதியும் என்றால், இனி ஆவது எப்பொருள், இம்மையும் அம்மையும் தேவரைப் பரவும் துணை சீர்த்ததே? |
‘அவர் ஏவ - அந்தணர் ஆணையிட; ஆவதற்கும் - (ஒருவர்) மேம்படுவதற்கும்; அழிவதற்கும் - அழிந்துபோவதற்கும்; விதியும் நிற்கும்- விதியும் துணையாக நின்றுஉதவும்; என்றால்-; இனி -; இம்மையும் - இவ்வுலகத்தும்; அம்மையும் - அவ்வுலகத்தும்;தேவரைப் பரவும்துணை- பூசுரராகிய அந்தணரைத் துதிக்கின்ற அளவு; சீர்த்தது -சிறப்புடையது; ஆவது - பொருந்திய; எப்பொருள் - எந்தப் பொருள்?’ (எதுவும் இல்லை.) தெய்வங்களுக்கும் கட்டுப்படாது தன்வழியில் செயற்படும் விதியும் அந்தணர்க்கு ஏவல் செய்யும் என்பதாம். ‘ஏ’ ஈற்றசை. 18 |