| | ‘எந்தை! இத் தானைதன்னை ஏற்றுதி, விரைவின்’ என்றான். |
சிருங்கி பேரியர் கோன்- சிருங்கிபேரம் என்னும் நகரில் உள்ளார்க்கு அரசன் ஆகிய குகன்; (பரதனை நோக்கி) ‘வரிசிலைக் குரிசில் மைந்த - கட்டமைந்த வில் தொழிலிற் சிறந்த தயரத குமாரனாகி பரதனே!; வரம்பு இல் நாவாய் வந்தன - கணக்கில்லாத படகுகள் வந்துள்ளன; சிந்தனையாவது’ - (உன்) மனக்கருத்து என்ன?; என்று செப்ப - என்று சொல்ல; சுந்தரவரிவில்லானும் - அழகிய கட்டமைந்த வில்லானாகிய பரதனும்; சுமந்திரன் தன்னைநோக்கி - (மதியமைச்சருள் மூத்தோனாகிய) சுமந்திரனைப் பார்த்து; ‘எந்தை - என்தந்தையே!; இத்தானை தன்னை - இச்சேனைகளை; விரைவின் ஏற்றுதி’-விரைவாகப் படகில் ஏற்றுக; என்றான் - என்று சொன்னான். சிருங்கி பேரன் என்பது குகனது நாட்டின் தலைநகரம். ‘வரிசிலைக் குரிசில்’ என்று தயரதனைக் கூறியதற்கேற்பச் ‘சுந்தர வரிவிலானும்’ என்று இப் பாடலிலேயே பரதனைக் குறிப்பிட்டது ஒரு நயம். சுமந்திரன் தேர் ஒட்டுதலில் வல்லவன்; அமைச்சன்; தயரதனுக்கு மிகவும் அணுக்கமானவன். ஆதலின், அவனைத் தன் தந்தையெனவே கொண்டு கூறினான் பரதன். எந்தை - அண்மைவிளி. 47 | 2350. | குரிசிலது ஏவலால், அக் குரகதத் தேர் வலானும், வரிசையின் வழாமை நோக்கி, மரபுளி வகையின் ஏற்ற, கரி, பரி, இரதம், காலாள், கணக்கு அறு கரை இல் வேலை, எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே! |
குரிசிலது ஏவலால்- பரதனது கட்டளையால்; அக் குரகதத் தேர்வலானும் - குதிரைகள் பூட்டிய தேரைச்செலுத்தலில் வல்ல அச்சுமத்திரனும்; வரிசையின் வழாமை நோக்கி - முறைப்படி தவறாமல் பார்த்து; மரபுளி வகையின் ஏற்ற - அவரவர்க்குள்ள மரபுகளின்படி (படகுகளில்)ஏற்றியனுப்ப; கரி, பரி, இரதம், காலாள் - யானை, குதிரை, தேர், வீரர் என்றுசொல்லப்பெறும்; கணக்கு அறு - எண்ணிக்கையில் அளவுபடாத; கரை இல் வேலை - கரையற்றசேனைக் கடல்; எரிமணி திரையின் வீசும் - ஒளிவீசும் மணிகளை அலைகளால் (கரைக்கண்)எறிகின்ற; கங்கை யாறு - கங்கையாற்றை; ஏறிற்று - கடந்து அக்கரை சென்றுஏறியது. முன்செல்வார், பின்செல்வார் என்ற முறையும், நாவாயில் முன் அமர்வோர், பின் அமர்வோர், இருப்போர், நிற்போர், தனித்து ஏற்றப்படுவோர், |