குழுவாக ஏற்றப்படுவோர் என உள்ள எல்லாம் அடங்க, ‘வரிசையின் வழாமை’ என்றும், ‘மரபுளி வகையின்’ என்றும் கூறினார். சேனைக்கடல் யாறு ஏறிற்று என்றது ஒரு நயம். அன்றே என்றது வியப்புக் குறித்து வந்தது. ‘அன்று’, ‘ஏ’ அசைகள். 48 | 2351. | இடிபடு முழக்கம் பொங்க, இன மழை மகர நீரை முடிவு உற முகப்ப, ஊழி இறுதியின் மொய்ப்ப போலக் கொடியோடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின, நெடுங் கை வேழம். |
இன மழை - கூட்டமான மேகங்கள்; இடிபடு முழக்கம் பொங்க - ஒன்றுடன் ஒன்றுமோதுவதால் உண்டாகிய முழக்க ஒலி அதிகரிப்ப; ஊழி இறுதியின் - யுகப்பிரளயகாலத்தே; மகர நீரை - கடல் நீரை; முடிவுஉற முகப்ப - அடியோடு வற்றும்படிமொண்டு உண்பதற்காக; மொய்ப்ப போல - நெருங்கி யுள்ளவை போலவும்; கொடியோடுவங்கம் - கொடியோடு கூடிய கப்பல்; வேலை - கடலின்கண்; கூம்பொடு - பாய்மரத்தோடு; படர்வ போல - செல்வன போலவும்; நெடுங்கை வேழம் - நீண்டதுதிக்கையை உடைய யானைகள்; நெடிய கை எடுத்து நீட்டி - தமது நீண்ட துதிக்கையை உயரத்தூக்கி; நீந்தின- (கங்கையில்) நீந்திச் சென்றன. மகரம் என்பது கறாவைக் குறிக்கும். அதனை உடைய நீர் எனவே கடல் ஆயிற்று. கங்கையில் நீந்திச் செல்லும் யானைகளுக்கு இரண்டு உவமைகள் கூறினார் - ஊழிக்காலத்து மேகங்கள் ஒன்றாய்க் கடல்நீரை வற்றக் குடிப்பன போலவும், கப்பல் பாய்மரத்துடன் கடலில் செல்வது போலவும் என. 49 | 2352. | சங்கமும் மகர மீனும், தரளமும் மணியும் தள்ளி, வங்க நீர்க் கடலும் வந்து தன் வழிப் படர, மானப் பொங்கு வெங் களிறு நூக்க, கரை ஒரீஇப் போயிற்று அம்மா - கங்கையும் இராமற் காணும் காதலது என்ன மாதோ! |
மானம் - பெருமை பொருந்திய; பொங்கு - மேல்கிளம்பிய; வெங்களிறு -கொடிய யானைகள்; நூக்க - தள்ளுதலால்; சங்கமும் மகரமீனும் தரளமும் மணியும்தள்ளி - சங்கு, சுறாமீன், முத்து, |