பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 651

இது’ என்று - பிறரைக் கொல்ல வரும் பெரும்படை இது என்று; உணரக்
கூற
- பலரும் அறிய எடுத்துச்சொல்ல....(மேல் முடியும்).

     புழுதியும், ஒலியும் படையின் பெருமை, வலி ஆகியவற்றை
முன்னுணர்த்தின; அது கண்டு கேட்டுச்சீறி எழுந்தான் இலக்குவன் என்று
அடுத்த பாட்டில் முடிகிறது. கோள் - கொலை சூழ்தல் ஆகும்.வலிய
என்றும் ஆகும். ‘ஏ’ ஈற்றசை.                                    25

பரதன் சேனை எழுச்சி கண்டு இலக்குவன் சீற்றம் அடைதல்  

2400.எழுந்தனன், இளையவன்; ஏறினான், நிலம்
கொழுந்து உயர்ந்தனையது ஓர் நெடிய குன்றின்மேல்;
செழுந் திரைப் பரவையைச் சிறுமை செய்த அக்
கழுந்துடை வரி சிலைக் கடலை நோக்கினான்.

     (பரதன் சேனைகள் வரும் நிலையைத் தன் குறிப்பால் உணர்ந்து)
இளையவன்
-இலக்குவன்;  எழுந்தனன் - எழுந்து;  நிலம் கொழுந்து
உயர்ந்தனையது ஓர் நெடியகுன்றின்மேல் ஏறினான்
- நிலவுலகம்
கொழுந்துவிட்டு உயர்ந்தாற் போன்றதான ஒருநீண்டுயர்ந்த மலையின் மேல்
ஏறி;  செழுந்திரைப் பரவையை - வளவிய அலைகளையுடையகடலை;
சிறுமை செய்த - சிறியது  எனக் கருதும்படி செய்த; அக் கழுந்து உடை
வரிசிலைக் கடலை
- அந்த வலிமை மிக்க கட்டமைந்த வில்லை ஏந்திய
சேனைக் கடலை;  நோக்கினான் - பார்த்தான்.

     நலத்தின் மேல் உள்ள நெடிய மலை, நிலம் கொழுந்துவிட்டு
உயர்ந்தது  போல் உள்ளதுஎன்றார். தற்குறிப்பேற்றம். சேனைக் கடலின்
பெருமை நோக்கியவழி கடல் சிறியதாக  உள்ளது.கழுந்து - வலிமை.
“கழுந்தோடும் வரிசிலைக்கைக் கடற்றானை” (237.) எனப் பாலகாண்டத்து
வருதல்காண்க. கழுந்து - வில்லின் கழிப் பகுதியாகும் என்பதும் ஒன்று.
வில்லை இடையறாது கையிற்பிடித்தலால் தேய்ந்து  வழுவழுப்பாதலைக்
‘கழுந்து’ எனக் கூறுவதாகவும் பொருள் உரைப்பர்.இளையவன் எழுந்து,
ஏறி, நோக்கினான் என முடிக்க.                                  26

2401. ‘பரதன், இப் படைகொடு,
     பார்கொண்டவன், மறம்
கருதி, உள் கிடந்தது
     ஓர் கறுவு காதலால்,
விரதம் உற்று இருந்தவன் மேல்
     வந்தான்; இது
சரதம்; மற்று இலது’ எனத் தழங்கு
     சீற்றத்தான்.