(காலில்) வீரக்கழலையும் கட்டிக்கொண்டு; பல்கணைப் புட்டிலும் பொறுத்தனன் - பல்வகைஅம்புகளையுடைய தூணியைத் (தோளில்) சுமந்து; கவசம் பூட்டு அமைத்து இட்டனன் -போர்க் கவசத்தை (உடம்பிற்) பூட்டிக்கொண்டு; வரிவில் எடுத்தனன் - கட்டமைந்தவில்லைக் (கையில்) எடுத்துக்கொண்டு; ஏந்தலை அடிதொட்டு வணங்கி நின்று - இராமனைத்திருவடி தொட்டு வணக்கம் செய்து எழுந்து நின்று; இனைய சொல்லினான் - இவ்வார்த்தைகளைச் சொன்னான். போர்க்குச் சன்னத்தனானான் என்றார். ஏந்தல் - இராமன்; உயர்ந்தோன் என்னும்பொருளி்ல் வந்தது. திருவடி தொட்டு வணங்குதல் என்பது ஒரு மரபு. 29 இலக்குவன் வீர உரை | 2404. | ‘இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோள் பருமையும், அன்னவன் படைத்த சேனையின் பெருமையும், நின் ஒரு பின்பு வந்த என் ஒருமையும், கண்டு, இனி உவத்தி, உள்ளம் நீ. |
‘இருமையும் இழந்த - இம்மை, மறுமை இரண்டையும் சேர இழந்த; அப் பரதன் ஏந்துதோள் பருமையும் - அந்தப் பரதனது உயர்ந்த தோளின் பருத்த தன்மையும்; அன்னவன்- அப் பரதன்; படைத்த சேனையின் - பெற்றுள்ள சேனையின்; பெருமையும் -பெருமையையும்; நின்பின்பு வந்த - உனது பின்னாலே வந்த; ஒரு என் - தனியான என்னுடைய; ஒருமையும் - ஒப்பற்ற தன்மையையும்; கண்டு - (இப்போது) பார்த்து; இனி நீ உள்ளம் உவத்தி - இனிமேல் நீ மனமகிழ்ச்சி அடைவாயாக...... அண்ணன் மேல் போர்தொடுத்து வந்தான் எனவே அறத்துக்கு மாறுபட்டான்; இருமையும் இழந்தான்என்றானாம். யான் ஒருவனே அத்துணைச் சேனைகளையும் அழிப்பதைப் பார் என்றானாம். 30 | 2405. | ‘படர் எலாம் படப் படும் பரும யானையின் திடர் எலாம் உருட்டின, தேரும் ஈர்த்தன, குடர் எலாம் திரைத்தன, குருதி ஆறுகள், கடர் எலாம் மடுப்பன, பலவும் காண்டியால். |
‘படல் எலாம் பட - பல வகைத் துன்பங்களும் அடைந்து; படும் - இறக்கிற; பரும யானையின் - அணி அணிந்த யானையினது; திடர் எலாம் உருட்டின- உடல்களாகிய மேடுகளையெல்லாம் உருட்டி; தேரும் ஈர்த்தன - தேர்களைஇழுத்துக்கொண்டு; குடர் எலாம் திரைத்தன - குடல்களையெல்லாம் அலைத்துத் தள்ளி; குருதி ஆறுகள் - |