பக்கம் எண் :

654அயோத்தியா காண்டம்

இரத்த நதிகள்; பலவும் கடர் எலாம் மடுப்பன - பலவும் கடல் முழுவதும்
பாய்ந்து கலப்பனவற்றை; காண்டி - பார்ப்பாயாக...

     உருட்டி,  ஈர்த்து,  திரைத்துக் குருதி ஆறு கடலில் மடுத்தல் காண்டி
என முடிக்க.  குடல்,குடர் என்றார்போலக் கடல், கடர் என நின்றது
செய்யுட்போலி. ‘ஆல்’ ஈற்றசை.                                  31

2406. ‘கருவியும், கைகளும், கவச மார்பமும்,
உருவின; உயிரினோடு உதிரம் தோய்வு இல
திரிவன - சுடர்க் கணை - திசைக் கை யானைகள்
வெருவரச் செய்வன; காண்டி, வீர! நீ.

     ‘வீர! நீ - இராமனே ! நீ; கருவியும் கைகளும் கவச மார்பமும்
உருவின
-எதிரிகளது ஆயுதங்களையும்,  கரங்களையும்,  கவசமணிந்த
மார்பகத்தையும்  உருவிக்கொண்டு; உயிரினோடு - அவர்கள் உயிரையும்
உடன்பற்றி;  உதிரம் தோய்வு இல -இரத்தத்தில் சிறிதும் தோயாமல்;
சுடர்க்கணை - என்னுடைய ஒளிபடைத்த அம்புகள்;  திசைக்கை
யானைகள்
- எட்டுத் திசைப் பக்கத்திலும் உள்ள யானைகளும்; வெருவர-
அஞ்சும்படி;  திரிவன செய்வன - சுற்றித் திரிதல் செய்வனவற்றை;
காண்டி -பார்ப்பாயாக....

     அம்புகள் உடலிற் பாய்ந்து உருவியும் உதிரம் தோயாமல் இருத்தலின்
அவற்றைக் கண்டுதிசையானைகள் வெருவின. கை திசையொடு வருதலின்
பக்கமாம்.                                                   32

2407.‘கோடகத் தேர், படு குதிரை தாவிய,
ஆடகத் தட்டிடை, அலகை அற்று உகு
கேடகத் தடக் கைகள் கவ்வி, கீதத்தின்
நாடகம் நடிப்பன - காண்டி; நாத! நீ.’

     ‘நாத! நீ -; தாவிய குதிரை படு கேடகத் தேர் - தாவிச் செல்லும்
குதிரைகள்இறந்து போன வளைந்து அழகிதாய தேரினது;  ஆடகத்
தட்டிடை
- பொன்மயமானநடுப்பீடத்தின்கண்; அலகை- பேய்கள்; அற்று
உகு கேடகத் தடக் கைகள் கவ்வி -
போர்க்களத்துத் துண்டாகி விழுந்த
கேடகத்தோடு கூடிய நீண்ட கைகளைத் தம் கையாற் பற்றி
(தாளமிட்டுக்கொண்டு); கீதத்தின் - இசை பாடிக்கொண்டு;  நாடகம்
நடிப்பன
-கூத்தாடுவனவற்றை;  காண்டி - பார்ப்பாயாக..

     பலகை எனப்படும் கேடயத்தோடு அற்று விழுந்த கைகளைப் பேய்கள்
தாம் எடுத்துக்கொண்டனகானம் இட்டு ஆடுதல் போலும். கோடகம்
என்பது தேர் உறுப்பு எனலும்ஆம்.                              33