| 2408. | ‘பண் முதிர் களிற்றொடு பரந்த சேனையின் எண் முதல் அறுத்து, நான் இமைப்பின் நீக்கலால், வின் முதுகு உளுக்கவும், வேலை ஆடையின் மண் முதுகு ஆற்றவும் காண்டி - வள்ளல்! நீ |
‘வள்ளல் - இராமனே; நீ -; பண் முதிர் - அழகு மிக்க; களிற்றொடு - யானைகளோடு; பரந்த சேனையின் எண் - பரந்துபட்ட படைகளின்கணக்கை; முதல் அறுத்து - அடியோடு போக்கி; நான் இமைப்பில் நீக்கலால் -நான் கணநேரத்தில் அழித்தலால், (இவை அனைத்தும் வீர சுவர்க்கம் அடைந்து விண்ணில்ஏறலாம்); விண் முதுகு உளுக்கவும் - விண்ணுலகம் முதுகு நெளிக்கவும்; மண் -மண்ணுலகம் (பாரம் நீங்குதலின்); முதுகு ஆற்றவும் - முதுகு வலி நீங்கப் பெறவும்; காண்டி - பார்ப்பாயாக.... பண் -அலங்காரம். பண்ணுதல். கை செய்தல், அலங்கரித்தலாம். எண் முதல் அறுத்தல் -இல்லாதபடி செய்தல் ஆகும். போரில் இறந்தோர் வீரசுவர்க்கம் பெறுவர் ஆதலின், எல்லாச்சேனைகளும் இறந்து விண்ணுலகு பெற்றதனால் விண் முதுகுவலி எடுத்து நெளிக்கலாயிற்று. இனி -உளுக்க’ என்பதற்கு இற்று உளுத்துப் போய் விழ’ எனவும் உரைக்கலாம். பூபாரம் நீங்கலின்மண் முதுகு ஆற்றியது என்றானாம். 34 | 2409. | ‘நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய் சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும், கவந்தமும், “உலகம் நின் கையது ஆயது” என்று உவந்தன குனிப்பன காண்டி, உம்பர்போல். |
‘நிவந்த - உயர்ந்து வழிந்து ஒழுகிய; வான் குருதியின் நீத்தம் - பெரிய இரத்த வெள்ளத்திலே; நீந்தி - நீந்திச் சேறலால்; மெய் சிவந்த- உடம்பு செந்நிறமாகப் பெற்ற; சாதகரொடு - பூத கணங்களோடு; சிறுகண் கூனியும்- (உடம்பிற்கு ஒவ்வாத) சிறிய கண்ணை உடைய பேய்களும்; கவந்தமும் - தலையற்றஉடற்குறையும்; “உலகம் நினகையது ஆயது” என்று - உலகமனைத்தும் இராமனாகிய உன் வசம்ஆய்விட்டது என்று; உம்பர் போல்- தேவர்கள் (மகிழ்தல்) போல; உவந்தன- மகிழ்ந்தனவாய்; குளிப்பன - நடனம் ஆடுவன; காண்டி - பார்ப்பாயாக.... சாதகரொடு ‘கூனியும் கவந்தமும் குளிப்பன’ என முடியும் ‘‘பலவயினானும் எண்ணுத் திணை விரவுப்பெயர், அஃறிணை முடிபின செய்யுளுள்ளே” (தொல். சொல். கிளவி. 51.) என்பவாதலின்‘குனிப்பன’ என அஃறிணையாய் முடிந்தது. தேவர்கள் மகிழ்தல் இயல்பு. பேய்கள் மகிழ்ந்து ஆடுதலாகக் கூறியது தற்குறிப்பேற்றமாம். 35 |