பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 655

2408.‘பண் முதிர் களிற்றொடு பரந்த சேனையின்
எண் முதல் அறுத்து, நான் இமைப்பின் நீக்கலால்,
வின் முதுகு உளுக்கவும், வேலை ஆடையின்
மண் முதுகு ஆற்றவும் காண்டி - வள்ளல்! நீ

     ‘வள்ளல் - இராமனே;  நீ  -;  பண் முதிர் - அழகு மிக்க;
களிற்றொடு
- யானைகளோடு; பரந்த சேனையின் எண் - பரந்துபட்ட
படைகளின்கணக்கை;  முதல் அறுத்து - அடியோடு போக்கி;  நான்
இமைப்பில் நீக்கலால்
-நான் கணநேரத்தில் அழித்தலால்,  (இவை
அனைத்தும் வீர சுவர்க்கம் அடைந்து  விண்ணில்ஏறலாம்);  விண் முதுகு
உளுக்கவும்
- விண்ணுலகம் முதுகு நெளிக்கவும்;  மண் -மண்ணுலகம்
(பாரம் நீங்குதலின்);  முதுகு ஆற்றவும் - முதுகு வலி நீங்கப் பெறவும்;
காண்டி - பார்ப்பாயாக....

     பண் -அலங்காரம். பண்ணுதல். கை செய்தல், அலங்கரித்தலாம். எண்
முதல் அறுத்தல் -இல்லாதபடி செய்தல் ஆகும். போரில் இறந்தோர்
வீரசுவர்க்கம் பெறுவர் ஆதலின், எல்லாச்சேனைகளும் இறந்து விண்ணுலகு
பெற்றதனால் விண் முதுகுவலி எடுத்து நெளிக்கலாயிற்று. இனி -உளுக்க’
என்பதற்கு இற்று  உளுத்துப் போய் விழ’ எனவும்  உரைக்கலாம். பூபாரம்
நீங்கலின்மண் முதுகு ஆற்றியது என்றானாம்.                      34

2409.‘நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய்
சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும்,
கவந்தமும், “உலகம் நின் கையது ஆயது” என்று
உவந்தன குனிப்பன காண்டி, உம்பர்போல்.

     ‘நிவந்த - உயர்ந்து வழிந்து ஒழுகிய; வான் குருதியின் நீத்தம் -
பெரிய இரத்த வெள்ளத்திலே; நீந்தி - நீந்திச் சேறலால்; மெய் சிவந்த-
உடம்பு செந்நிறமாகப் பெற்ற; சாதகரொடு - பூத கணங்களோடு; சிறுகண்
கூனியும்
- (உடம்பிற்கு ஒவ்வாத) சிறிய கண்ணை உடைய பேய்களும்;
கவந்தமும் - தலையற்றஉடற்குறையும்; “உலகம் நினகையது ஆயது”
என்று
- உலகமனைத்தும் இராமனாகிய உன் வசம்ஆய்விட்டது  என்று;
உம்பர் போல்- தேவர்கள் (மகிழ்தல்) போல; உவந்தன- மகிழ்ந்தனவாய்;
குளிப்பன - நடனம் ஆடுவன; காண்டி - பார்ப்பாயாக....

     சாதகரொடு ‘கூனியும் கவந்தமும் குளிப்பன’ என முடியும்
‘‘பலவயினானும் எண்ணுத் திணை விரவுப்பெயர்,  அஃறிணை முடிபின
செய்யுளுள்ளே” (தொல். சொல். கிளவி. 51.) என்பவாதலின்‘குனிப்பன’ என
அஃறிணையாய் முடிந்தது. தேவர்கள் மகிழ்தல் இயல்பு.  பேய்கள் மகிழ்ந்து
ஆடுதலாகக் கூறியது  தற்குறிப்பேற்றமாம்.                          35