பக்கம் எண் :

656அயோத்தியா காண்டம்

2410.‘சூழி வெங் கட கரி, துரக ராசிகள்,
பாழி வன் புயத்து இகல் வயவர், பட்டு அற,
வீழி வெங் குருதியால் அலைந்த வேலைகள்
ஏழும் ஒன்றாகி நின்று இரைப்பக் காண்டியால்.

     ‘சூழி - முகபடாம் அணிந்த;  வெங் கடகரி - கொடிய மதம் உடைய
யானைகள்; துரக ராசிகள் - குதிரைத் தொகுதிகள்; பாழி - பருத்த; வன்-
வலிய;  புயத்து - தோளை உடைய; இகல் வயவர் - பகைத்த வீரர்கள்;
பட்டு அற - செத்து விழ;  வீழி - வீழ்ந்த; வெங்குருதியால் - கொடிய
இரத்தப் பெருக்கால்; அலைந்த வேலைகள் ஏழும் - அலை வீசும் ஏழு
கடல்களும்; ஒன்றாகி நின்று - ஒரு கடலாகியிருந்து; இரைப்ப- ஒலிசெய்ய;
காண்டி -பார்ப்பாயாக...

     நால்வகைச் சேனைகளும் அடியோடு அழிதலால் உண்டான
குருதியாறு கூடுதலால் ஏழுகடல்களும்ஒன்றாகி இரரைத்தன. வீழி - வீழிப்
பழம் போன்று சிவந்த குருதி என்றும் ஆம். அலைந்தஎன்பது
வேலைகளுக்கு அடை.  இனி,  குருதியால் அலைவீசிய வேலைகள் ஏழும்
ஒன்றாகின எனினும்அமையும். ‘ஆல்’ ஈற்றசை.                      36

2411.‘ஆள் அற; அலங்க தேர் அழிய; ஆடவர்
வாள் அற; வரி சிலை துணிய; மாக் கரி
தாள் அற, தலை அற; புரவி தாளொடும்
தோள் அற - வடிக் கணை தொடுப்ப - காண்டியால்.

     ‘ஆள் அற - போர் வீரர்கள் அறுபட; அலங்க தேர் அழிய -
அசைகின்றதேர்கள் அழிய; ஆடவர் வாள் அற - வாள்வீரர்கள்
வாளொடு அற்று விழ;  வரிசிலைதுணிய - கட்டமைந்த வில்கள்
துண்டுபட;  மாக் கரி - பெரிய யானைகள்;  தாள்அற தலை அற -
தாளும்  தலையும் துண்டபட்டு விழ;  புரவி - குதிரைகள்;  தாளொடும்
தோள் அற
- கால்களோடு தோள்கள் துண்டுபட;  வடிக் கணை - கூரிய
அம்புகளை;  தொடுப்ப - யான் செலுத்த;  காண்டி - பார்ப்பாயாக...

    ஆள் என்றது தேர்மேல் நின்ற ஆளும் ஆம். ‘ஆல்’ ஈற்றசை.    37

2412.‘தழைத்த வான் சிறையன, தசையும் கவ்வின,
அழைத்த வான் பறவைகள், அலங்கு பொன் வடிம்பு
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடைப்
புழைத்த வான் பெரு வழி போக - காண்டியால்.

     தழைத்த வாய் சிறையன - வளமான சிறந்த இறக்கைகளை
உடையனவாய்; அழைத்த- தம் இனத்தைக் கூவி அழைத்த; வான்