‘கொன் பெற்ற - அச்சம் தருதலை உடைய; வெற்றிக் கொலை பெற்ற -தமக்கு வெற்றி உண்டாகும் கொலைத் தொழிலை உடைய; கூர் வேலோய் - கூரிய வேற்படையைஉடைய தயரதனே; சொல்பெற்ற - புகழ் உடைய; நோன்பின் துறையோன் -தவத்துறையில் சிறந்த கலைக்கோட்டு முனிவனது; அருள் வேண்டி- கருணையை வேண்டிப்பெற்று; நல் பெற்ற வேள்வி - நல்ல புத்திர காமேஷ்டியோடு கூடிய பரிமேத வேள்வியை; நவை நீங்க - பிள்ளை இல்லாக் குறை தீர; நீ இயற்றி - நீ செய்து; என்பெற்று - என்னை மகனாகப் பெற்று; நீ பெற்றது - நீ அடைந்த பயன்தான்; இன்உயிர் போய் நீங்கலோ? - இனிய உயிர் போய் இறக்கப் பெறுதல்தானோ? சொல் - புகழ். கலைக்கோட்டு முனிவரை அரிதின் கொண்டுவந்து வேள்வி இயற்றி இராமனைப் பெற்றானாதலின் இங்ஙனம் கூறப்பெற்றான். மக்களைப் பெற்று மகிழ எண்ணியவன் அம்மக்களைப் பிரிந்த துன்பத்தாலே உயிர் போகப் பெறுதலால் இரக்கம் பெரிதாயிற்று. தயரதன் இறப்புக்குத் தானே காரணமானோம் என்று இராமன் இரங்கினன். கொன் - அச்சம், பெருமை எனப் பொருள்படும். உரிச்சொல் - இனி, கொல் பெற்ற எனில் கொலையாம், பின்னரும் கொலைபெற்ற என வருதலின் அங்ஙனம் பிரித்தல் ஏலாதாம். வேள்வியால் மக்கள் நால்வர் தயரதனுக்கு உளர் ஆயினும் தயரதன் இறப்புக்கு இராமன் பிரிவு ஒன்றே காரணம் ஆதலின் ‘எனப்பெற்று’ என்று கூறியதாகக் கருதுக. 61 | 2436. | ‘மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க, பொன் உயிர்க்கும் தாரோய்!- பொறை உயிர்த்த ஆறு இதுவோ? உன் உயிர்க்குக் கூற்றாய் உலகு ஆள உற்றேனோ?- மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய்! |
‘பொன் உயிர்க்கும் தாரோய்! - பொன் மயமான தாதுக்களை உதிர்க்கும் பூமாலையை அணிந்தவனே!; மின் உயிர்க்கும் - ஒளி வீசுகிற; தீ வாய் -நெருப்பு சிந்தும் வாயினை உடைய; வெயில் விரிக்கும் - சூரியன் ஒளி சிந்துகிற; வெள் - வெண்மையான; வேலோய்! - வேலை உடைய தயரதனே; மன் உயிர்க்கு - நிலை பெற்ற எல்லா உயிர்களுக்கும்; நல்கு உரிமை - அருள் செய்கிற உரிமையுடைய; மண் பாரம் - (உன்) அரசாட்சி என்கிற சுமையை; நான் சுமக்க - நான்ஏற்றுக்கொள்ள; பொறை - அப்பூமி பாரம்; (நீ நீங்கி) உயிர்த்த ஆறு இதுவோ?- இளைப்பாறிய விதம் இது தானோ?; உன் உயிர்க்குக் கூற்றாய் - உன் உயிர்க்குயமனாக; உலகு ஆள உற்றேனோ - உலகத்தை ஆளப் பிறந்தேனோ? |