பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 671

 மாண்டு முடிவது அல்லால், மாயா உடம்பு இது கொண்டு
ஆண்டு வருவது, இனி, யார் முகத்தே நோக்கவோ?

     ‘வேண்டும் திறத்தாரும் - எல்லாவற்றையும் விரும்பும் தன்மை
உடையவர்களும்; வேண்டா - (துன்பம் தருவது  என்று கருதி) விரும்பாத;
அரசாட்சி - அரசு ஆளும்தொழிலை; பூண்டு- (நீ அளித்த அளவிலேயே
ஆராயாது) மேற்கொண்டு; இவ் உலகுக்கு- இந்த உலகத்துக்கு; இடர்
கொடுத்த
- துன்பத்தைக் கொடுத்த; புல்லனேன் -அற்பனாகிய யான்;
(இனிச் செய்யத் தகுவது) மாண்டு முடிவது அல்லால் - இறந்தொழிவது
அல்லாமல்; மாயா உடம்பு இது கொண்டு - இப்போதும் அழியாத
உடம்பினைக் கொண்டு; ஆண்டு வருவது - அரசாட்சி செய்ய எண்ணுவது;
இனி, யார் முகத்தே நோக்கவோ -இனிமேல் யார் முகத்தைப்
பார்ப்பதற்காகவோ?

     யார் முகத்தையும் பார்க்க இயலாது என்றபடி. தன்னைத்தானே
புல்லன் என்று இராமன் வருந்திக் கூறினான். எல்லால் விரும்புல் தன்மை
உடையவரும் அரசாளுவதை விரும்பாமைக்கு அரசு துன்பம் தரும் என்பதே
காரணமாதலை “மழை வளம் கரப்பின் வான் பேரச்சம், பிழையுயிர் எய்தின்
பெரும் பேரச்சம், குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி, மன்பதை காக்கும்
நன்குடிப் பிறத்தல், துன்பம் அல்லது தொழுதகவு இல்” என்னும் (சிவப்.
வஞ்சி. 25:100 - 104) சிலப்பதிகார அடிகளான் அறிக. இராமன் அரசாட்சியை
ஏற்க இசையாமல் இருந்தால் தொடர்ந்த துன்பங்கள் உலகுக்கு வந்திராது
என்று கருதி “உலகுக்கு இடர் கொடுத்த” என்றான்.                   64

2439.‘தேன் அடைந்த சோலைத்
     திரு நாடு கைவிட்டுக்
கான் அடைந்தேன் என்னத்
     தரியாது, காவல! நீ
வான் அடைந்தாய்; இன்னம் இருந்தேன்
     நான், வாழ்வு உகந்தே!-
ஊன் அடைந்த தெவ்வர்
     உயிர் அடைந்த ஒள் வேலோய்!

     ‘காவல! - அரசனே!;  ஊன் அடைந்த தெவ்வர் - உடற் கொழுப்பு
மிக்க பகைவர்களது; உயிர் அடைந்த - உயிர்கள் தாமே வந்து புகலடைந்த;
ஒள் வேலோய்!- ஒளி படைத்த வேலை உடையவனே!;  (யான்) தேன்
அடைந்த சோலைத் திருநாடு
- தேன்பொருந்திய சோலைகள் மிகுந்த
கோசல நாட்டை; கைவிட்டு - நீங்கி; கான்அடைந்தேன் என்ன - வனம்
புகுந்தேன் என்று சொல்லக் கேட்டு;  தரியாது -ஆற்றாமல்; நீ வான்
அடைந்தாய்
- நீ இறந்த விண்ணுலகம் புகுந்தாய்; நான்இன்னம் வாழ்வு
உகந்து இருந்தேன்
-