பக்கம் எண் :

672அயோத்தியா காண்டம்

நானோ இன்னமும் (உயிர்விடாது) வாழ ஆசைப்பட்டு இருக்கின்றேன்.

     பகைவரிடத்திருந்தால் அவ்வப்போது நீங்கி ஓட வேண்டியிருத்தலின்;
தயரதன் கை வேலை அடைந்தால் என்றும் நீங்காது நிலையாகப்
பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதித் தெவ்வர் உயிர் அடைந்தது
என்றது ஒரு நயம். பிரிந்த அளவிலே தாங்காது உயிர் விட்ட உனக்கும். நீ
இறந்தும் உயிர் விடாத எனக்கும் அன்பில் உள்ள ஏற்றத்தாழ்வு எத்தகையது!
அன்பிற் சிறந்த நீ அன்பு சிறிதும் அற்ற என்பால் அன்பு வைத்தாயே
என்பதுபோலச் சொல்லி இரங்கினான் இராமன் என்க. ‘ஏ’ தேற்றம்.      65

2440.‘வண்மைஇயும், மானமும்,
     மேல் வானவர்க்கும் பேர்க்ககிலாத்
திண்மைஇயும், செங்கோல்
     நெறியும், திறம்பாத
உண்மைஇயும், எல்லாம்
     உடனே கொண்டு ஏகினையே!-
தன்னைஇ தகை மதிக்கும்
     ஈந்த தனிக் குடையோய்!’

     ‘தகை மதிக்கும் - பெருமை உடைய முழு நிலவுக்கும்; தண்மை இ-
குளிர்ச்சியை; ஈந்த - கொடுத்த (கொடுக்கும்படியான); தனிக் குடையோய்!-
ஒப்பற்ற வெண்கொற்றக் குடையை உடைய தயரதனே!; வண்மைஇயும் -
கொடைத்திறத்தையும்; மானமும் - மானத்தையும்; மேல் வானவர்க்கும் -
மேல் உலகில்உள்ள தேவர்களாலும்; பேர்க்ககிலா - மாற்ற முடியாத;
திண்மைஇயும் -வலிமையையும்; செங்கோல் நெறியும் - நேர்மையான
அரசாட்சி வழியையும்; திறம்பாதஉண்மைஇயும் - என்றம் எதனாலும்
மாறுபடாத சத்தியத்தையும்; எல்லாம் - கூறப்படாதஏனைய
நல்லியல்புகளையும்; உடனே கொண்டு - உன்னுடனேயே சேர்த்து
எடுத்துக்கொண்டு; ஏகினையே - (இறந்து) சென்றுவிட்டாயே.’

     இவை அனைத்தும் இனி இவ்வுலகில் தம்மைத் தாங்குவாரைப்
பெற்றில்லையாயின என்பதாகும்.மானம் - தம் நிலையில் தாழாமையும்
தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம். உயிரளபெடைகள்ஓசை இன்பம்
பயக்க வந்தன. அளபெடை இன்றியும் வரும், இவை கொச்சகக் கலி
ஆதலின்.                                                    66

இராமனைப் பலரும் பரிகரித்தலும் முனிவர் நெருங்குதலும்  

2441.என்று எடுத்துப் பற்பலவும்
     பன்னி, இடர் உழக்கும்
குன்று எடுத்த போலும்
     குவவுத் தோள் கோளரியை,