பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 673

 வன் தடக் கைத் தம்பியரும்,
     வந்து அடைந்த மன்னவரும்,
சென்று எடுத்துத் தாங்கினார்;
     மா வதிட்டன் தேற்றினான்.

     என்று எடுத்துப் பற்பலவும் பன்னி - என்று மிகுந்த குரலாற் பல
பலவார்த்தைகளையும் திரும்பத் திரும்பப் பலமுறை சொல்லி;  இடர்
உழக்கும்
-துன்பத்தில் மூழ்கியுள்ள; குன்று எடுத்த போலும் குலவுத்
தோள் கோளரியை
- மலையைத்தூக்கி நிறுத்தினாற் போலும் திரண்ட
தோள்களையுடைய சிங்கம் போன்ற இராமனை; வன்தடக்கைக்
தம்பியரும்
- வலிய பெரிய கைகளை உடைய தம்பிமார் மூவரும்; வந்து
அடைந்தமன்னவரும்
- (அங்கு) வந்து சேர்ந்த அரசர்களும்; சென்று -
நெருங்கி; எடுத்து - தூக்கி அணைத்து; தாங்கினார் - பரிகரித்தார்கள்; மா
வதிட்டன்
- பெருமையுடைய வசிட்ட முனிவன்; தேற்றினான் - தேறுதல்
வார்த்தைகளைக் கூறினான்.

     வசிட்டன் - இந்திரியங்களை வசப்படுத்தியவன், ஞானத்திற் குடி
கொண்டவன், பிரம ஒளி மிக்கவன் என்று பொருள். மன்னர்கள் பின் வந்து
சேர்ந்தனர் என்பதை ‘வந்து அடைந்த மன்னவர்’ என்பதனால் அறியலாம்.67

2442.பன்ன அரிய நோன்பின்
     பரத்துவனே ஆதி ஆம்
பின்னு சடையோரும்,
     பேர் உலகம் ஓர் ஏழின்
மன்னவரும், மந்திரியர்
     எல்லாரும், வந்து அடைந்தார்;
தன் உரிமைச் சேனைத்
     தலைவோரும்தாம் அடைந்தார்.

     பன்ன அரிய - சொல்லுதற்கு அரிய; நோன்பின் - தவத்தை
உடைய; பரத்துவனே ஆதி ஆம் - பரத்துவாசன் முதலாக உள்ள;
பின்னு சடையோரும் -திரித்துவிட்ட சடையை உடைய முனிவர்களும்;
பேர் உலகம் ஓர் ஏழின் மன்னவரும் - ஓர்ஏழு உலகங்களின்
அரசர்களும்; மந்திரியர் எல்லாரும் - அமைச்சர்கள் எல்லாரும்; வந்து
அடைந்தார் -
வந்து  சேர்ந்தார்கள்; தன் உரிமைச் சேனைத்
தலைவோரும் தாம்அடைந்தார்
- சக்கரவர்த்திகளுக்குரிய சேனையின்
தலைவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

     பரதனுடன் வந்தோர் பலரும் பின்னர் வந்து சேர்ந்தனர். ஆதலின்,
அவர்கள் எல்லாம்இராமனை நெருங்கினபடியை இதனாற் கூறினார் ‘தாம்’
என்பது உரையசை.                                           68