ஆதலின் அறவழியில் அரசாட்சி நடத்தி விண்ணுலகு சென்று இன்பம் துய்க்கும் ‘தயரதன்பற்றிவருந்தல் வேதங்களை நன்குணர்ந்த உனக்குக் கூடாது என்று வசிட்டன் இராமனுக்கு எடுத்துக்கூறினான். வீடுபேற்றுக்குச் சிறந்த வழியாதலின் துறவு முற்கூறப்பட்டது. ‘ஓ’ காரம்வினாப்பொருட்டு. 70 | 2445. | ‘ “உண்மை இல் பிறவிகள், உலப்பு இல் கோடிகள், தண்மையில் வெம்மையில் தழுவின” எனும் வண்மையை நோக்கிய, அரிய கூற்றின்பால், கண்மையும் உளது எனக் கருதல் ஆகுமோ? |
‘(உயிர்களுக்கு), “உண்மை இல் பிறவிகள் - நிலையில்லாதனவாகிய பிறப்புகள்; உலப்பு இல் கோடிகள் - அளவில்லாத கோடிக் கணக்கானவை; (அவை) தண்மையில்வெம்மையில் தழுவின” - இன்பத்தாலும் துன்பத்தாலும் உண்டாகப்பெற்றவை; எனும் -என்ற; வண்மையை - வளமாக நூல்களில் கூறப்பெற்றவற்றை; நோக்கிய - நன்குபார்த்து அறிந்தபின்பு; அரிய கூற்றின்பால் - கொடிய யமனிடத்தில்; கண்மையும் உளது என - கண்ணோட்டமும் இருக்கின்றது என்று; கருதல் ஆகுமோ - நினைக்கக்கூடுமோ? (கூடாது) இன்ப துன்பங்கட்கேற்பப் பல பிறவிகள் எடுக்கும் உயிர்கல் அவை தீர்ந்த பிறகு இறக்கின்றன. இதில் யமன் கண்ணோட்டம் உடையவனாதல் வேண்டும் எனக் கருதல் எற்றுக்கு என்பதாம். கண்மையாவது கண்ணின் தன்மை; அது கண்ணோட்டம். பிறர் துன்பம் கண்டு அவர்மாட்டுக் கண் ஓடியவழிச் செய்யப்படுவது ஆதலின், கண்மை எனப்பெற்றது. 71 | 2446. | ‘பெருவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால்? மறு அறு கற்பினில் வையம் யாவையும் அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன் இறுவது கண்டு அவற்கு, இரங்கல் வேண்டுமோ? |
‘பெறுவதன் முன் - தாய் ஈனுவதற்கு முன்பாகவே; உயிர்பிரிதல் - சிலஉயிர்கள் உடல் விட்டு நீங்கி இறப்பதை; காண்டி - பார்க்கின்றாய்; (அங்ஙனமாக)வையம் யாவையும் மறு அறு கற்பினில் - இந்த உலகம் எல்லாவற்றையும் குற்றமற்றகற்பினால்; அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன் - அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசாண்டசக்கரவர்த்தி; இறுவது கண்டு - இறத்தலைப் பார்த்து; அவற்கு -அவன்பொருட்டு; இரங்கல் வேண்டுமோ - மனம் வருந்த வேண்டுமோ? (வேண்டாம் என்றபடி) |