பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 679

சேந்த நின் கையினால்- சிவந்த நின் கைகளால்; கடன் எலாம் -
நீர்க்கடன் எலாம்; ஒழுக்குதி -செலுத்துவாயாக;’ என்றான்-.

     இறந்தோரைக் கருதிச் செய்யும் கிரியைகளின் பலன், பித்ரு
தேவதைகளைச் சார்கிறபடியால், உத்தமகதியை அடைந்தவர்களுக்கும்
கிரியைகளும், நீர்க்கடன்களும் செய்ய வேண்டுதலின் அவற்றைச் செய்க
என்றான் வசிட்டன். நீர்க்கடன் தருப்பணம்.                       78

2453.‘விண்ணு நிர் மொக்குகளின் விளியும் யாக்கையை
எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப்பாலதால்;
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை; போய்
மண்ணு நீர் உகுத்தி, நீ மலர்க்கையால்’ என்றான்.

     ‘நீ-; விண்ணு நீர் மொக்குளின் - ஆகாயத்திலிருந்து பெய்யும்
மழையில் எழுந்தநீர்க்குமிழி போல்; விளியும்
- (நிலையில்லாமல்) அழிகிற;
யாக்கையை
-உடம்பைக் குறித்து; எண்ணி அழுங்குதல் - சிந்தித்து
வருந்துதல்; இழுதைப்பாலது- பேதைமையின்பாற் படுவதாகும்; கண்ணின்
நிர் உகுத்தலின் கண்டது இல்லை
- கண்ணீர்சொரிதலால் அடையும்
பயன் ஒன்றும் இல்லை;  நீ மலர்க்கையால் - நீ தாமரை மலர்போன்ற கைகளால்; மண்ணு நீர் உகுத்தி- (பாவத்தைப் போக்கித்) தூய்மை செய்யும்
தருப்பண நீரைச் சொரிவாயாக;’ என்றான் - என்று  வசிட்டன் கூறினான்.

     துக்க மிகுதியால் கூறியும் இராமன் நீர்க்கடன் செய்ய எழாமையால்
மீண்டும் - வசிட்டன் கூறவேண்டியதாயிற்று. மண்ணு நீர் - மண்ணில் நீர்
உகுத்து என்னும் பொருள் பெரும். இழுதைப்பாலதால் - ‘ஆல்’ அசை.   79

இராமன் நீர்க்கடன் செய்து மீளுதல்  

2454.என்றபின், ஏந்தலை ஏந்தி வேந்தரும்,
பொன் திணிந்தன சடைப் புனிதனோடும் போய்ச்
சென்றனர், செறி திரைப் புனலில்; ‘செய்க’ என,
நின்றனர்; இராமனும் நெறியை நோக்கினான்.

     என்றபின் - என்று முனிவன் கூறிய பிறகு; ஏந்தலை ஏந்தி -
இராமனைக்கொண்டாடி; வேந்தரும் - அரசர்களும்; பொன் திணிந்தன
சடைப் புணிதனோடும் போய்
- பொன்னைத் திணித்து வைத்தாற்போன்ற
சடைகளை உடைய தவத்தோனாகிய வசிட்டனோடும் போகி;செறிதிரைப்
புனலில்
- நெருங்கிய அலைகளையுடைய  நதிநீரில்; சென்றனர் -சென்று
சேர்ந்தனர்; ‘செய்க’ என நின்றனர் - (இராமன் நீர்க்கடன்) செய்க என்று
நின்றார்கள்; இராமனும் நெறியை நோக்கினான் - இராமனும்
செய்யவேண்டிய வழிமுறைகளைச்சிந்தனையால் நோக்கினான்..