வசிட்டரும் வேந்தரும் நதிப்புனலில் சென்று நிற்க, இராமனும் நீர்க்கடன் செய்யும் கிரியை முறைகளை நோக்கினானாம். 80 | 2455. | புக்கனன் புனலிடை, முழுகிப் போந்தனன், தக்க நல் மறையவன் சடங்கு காட்ட, தான், முக் கையின் நீர் விதி முறையின் ஈந்தனன் - ஒக்க நின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான். |
உயிர்தொரும் - எல்லா உயிர்களிடத்தும்; ஒக்க நின்று - ஒரு தன்மையாகஉள்ளிருந்து; உணர்வு நல்குவான் - அவற்றிற்கு உணரும் தன்மையை அருளுபவனாகிய(பரம்பொருள்) இராமன்; புனலிடை புக்கனன் - நதிநீரிற் புகுந்து; முழுகி -நீராடி; போந்தனன் - வெளியேறி; தக்க நல் மறையவன் - சிறந்த நல்லவேதங்களை உணர்ந்தவனாகிய வசிட்டன்; சடங்கு காட்ட - செய்ய வேண்டிய சிறந்தகிரியைகளை வழிப்படுத்த; தான்-; முக்கையின் நீர் - கையினால் மூன்றுமுறை முகந்து எடுத்துவிடும் தருப்பண நீரை; விதிமுறையின் - நூல்களில் விதித்த முறைப்படி; ஈந்தனன் - (தன் தந்தையை நினைத்து) கொடுத்தான். எல்லா உயிர்களுக்கும் உள்ளுறைந்து உணர்வு தரும் பரம்பொருள், இராமன் என இப்போது மானுட வேடத்தில் வந்தான் ஆதலின் அதற்கேற்ப வேதவிதிப்படி சடங்குகள் காட்டத் தருப்பணம் செய்த தந்தையை வழிபட்டான் என்பதாம். 81 | 2456. | ஆனவன் பிற உள யாவும் ஆற்றி, பின், மான மந்திரத்தவர், மன்னர், மா தவர் ஏனையர் பிறர்களும், சுற்ற ஏகினன்; சானகி இருந்த அச் சாலை எய்தினான். |
ஆனவன் - தருப்பணம் செய்தவனான இராமன்; பிறஉளயாவும் ஆற்றி- வேறுபிண்டம் அளித்தல் முதலாக உள்ள சடங்குகளையும் செய்து முடித்து; பின் - பிறகு; மான மந்திரத்தவர் - பெருமை படைத்த மந்திரிகளும்; மன்னர் - அரசரும்; மா தவர் - பெரிய முனிவர்களும்; ஏனையர் பிறர்களும் - மற்றும் உள்ளவர்களும்; சுற்ற- தன்னைச் சுற்றிவர; ஏகினன் - சென்று; சானகி இருந்த அச்சாலை- சீதா பிராட்டி இருந்த அந்தக் குடிலை; எய்தினான் - அடைந்தான். ‘பிற உள’ என்பது நீர்க்கடன் செய்த பின்னர்அளிக்கப்படுவதாகிய பிண்டம் முதலியவற்றைக் குறிக்கும். இராமன் தயரதனின் மூத்த மகனாதலின் இறந்த முதல் நாள் தொட்டுப் பதின்மூன்றாம் நாள்வரை செய்யத் தகும் கருமங்கள் அனைத்தும்செய்ய வேண்டியவனாவான் என்பதுபற்றி இவ்வாறு கூறினார். |